Wednesday, October 20, 2010

நீங்கள் சாப்பிடும் உணவில் சுண்ணாம்பு, செங்கற்பொடி, குதிரை சாணம்!

கலப்பட உணவு பொருள்களைப் பயன் படுத்துவதால் ஆண்மை இழப்பு, கருச்சிதைவு, புற்றுநோய் ஏற் படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குநர் தீட்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்: மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் அவசிய மான பொருள் உணவு. இன்றைய காலகட்டங்களில் பொருள்கள் போதுமானதாக வும், தரமானதாகவும் கிடைப்ப தில்லை. இந்தியாவில் சற்றொப்ப 45 சதவிகிதம் பேர் ஆரோக் கியமான உணவின்றி கலப் படப் பொருள்களால் பாதிக்கப் படுகின்றனர்.
இவற்றைப் பயன்படுத்துவ தால் மனிதனுக்குப் பலவித மான நோய்கள் ஏற்படுகின் றன. சமூக விரோதிகள் சிலரே உணவுப் பொருள்களில் கலப் படம் செய்கின்றனர். கலப் படத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் உள்ள ‘அக்மார்க்’ ஆய்வகங்கள் மூலம் உணவுப் பொருள்களுக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கப்படுகிறது.
உணவுப் பொருள்களில் கலப்படத்தால் வரும் நோய் கள்: அரிசியில் மண், மணல் போன்றவை கலப்படம் செய்யப் படுவதால் வயிற்று நோய்கள் ஏற்படுகின்றன. துவரம் பருப் பில் கேசரிப் பருப்பு , கல், களி மண், உருண்டைகளைக் கலப் படம் செய்வதால் கால் வாதம், ஜீரணக் கோளாறு ஏற்படு கிறது. உணவு எண்ணெயில் பிரமத்தண்டு எண்ணெய் கலப்பதன் மூலம் கண் பார் வை பாதிப்பு, இதய நோய், கல்லீரல் வீக்கம், கால்களில் வாதம் ஏற்படுகின்றன. நெய் யில் வனஸ்பதி, மிருக உணவுக் கொழுப்பைக் கலப்படம் செய்யப்படுவதால் இதய நோய், முகவீக்கம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
தேனில் கலப்படம் செய்யாப் படும் சர்க்கரை பாகு, வெல்லப் பாகு போன்றவற்றால் நெஞ்சு வலி, வயிற்றுப் போக்கு ஏற்படு கிறது. தரமற்ற அரிசிமாவு, சோளமாவு, ஈயக்குரோமேட் ஆகியவற்றை மஞ்சள் தூளு டன் கலப்பதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை, பெண்க ளுக்கு கருச்சிதைவு ஏற்படு கிறது.மிளகாய்த் தூளில் மரத் தூள், செங்கற்பொடி, காங்கே ரெட் போன்ற பொருள்களை கலப்படம் செய்வதால் கண் பார்வை
மங்கல், சிறுநீரக
வீக்கம் ஏற்படுகிறது. மல்லித் தூளில் குதிரை சாணம், மரத் தூள் ஆகியவற்றைக் கலப் படம் செய்வதால் ஜீரணக் கோளாறு, இதயநோய் ஆகிய வற்றால் மக்கள் பாதிக்கப் படலாம்.
கரும்பு வெல்லத்தில் சுண் ணாம்பு, சாம்பல் போன்றவை கலப்படம் செய்வதால் வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியவை ஏற்படும். காபித்தூளில் புளியங் கொட்டையை, வறுத்து அரைத்து கலந்து பயன்படுத்து வதால் கர்பப்பைக் கோளாறு, மூளை, தோல், குடல் அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.
ஐஸ்கிரீம், பிஸ்கெட், கேக், குளிர்பானங்களில் செயற்கைச் சாயங்களைக் கலப்படம் செய்யவதால், தொடர் தலை வலி, அலர்ஜி, இறுதியில் புற்று நோய்க்கு வழி வகுக்கிறது.
எனவே ‘அக்மார்க்’ உணவுப் பொருள்களை பயன்படுத்தி னால் உடல் நலத்தையும், பணத் தையும் சேமிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-வி.சி.வில்வம்

No comments:

Post a Comment