Sunday, September 20, 2015

முகநூல் பதிவுகள் 
 
 
 
 
ஆர்.எஸ்.எஸ்.நோய்க்கான
ஒரே அறுவைச் சிகிச்சை
மருத்துவர்!
வில்வம் கியூபா இன் புகைப்படம்.
 
 
 
 
சில்லரைத் தட்டுப்பாடுகள் நிறைந்த நம் நாட்டில், பேருந்துக் கட்டணத்தை 11, 21, 31 என்றெல்லாம் நிர்ணயித்த அந்த அதிகாரிக்கு "அதி புத்திசாலி விருது" கொடுக்க வேண்டும்.
 
 
 
 
விநாயகர் சதுர்த்தி வருகிறது. எனக்குக் கூட பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல ஆசைதான். ஆனால் அவர் நன்றி சொல்வாரா?
 
 
 
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
மரமானாலும் பழமுதிர்ச் சோலையில் மரமாவேன்
கல்லானாலும் திருத்தணி மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பயிராவேன்...
மண்ணாவேன், மரமாவேன், கல்லாவேன், புல்லாவேன்
எப்ப தம்பி மனுசன் ஆவீங்க?
 
 
 
பெரியார் - விநாயகர் இருவருக்கும் செப்டம்பர்-17 பிறந்த நாள். இந்த இருவரில் நாட்டுக்கும், மக்களுக்கும் பாடுபட்டவர் யார்? பலனை உண்டாக்கியவர் யார்?
 
 
 
 
மும்பைத் தாராவிப் பகுதிக்குக் காமராஜர் அவர்கள் பேசச் சென்றுள்ளார். அவர் பேசுவதற்கு முன் நாடார் மகாஜன சங்கம், ஆதி திராவிட மகாஜன சங்கம், தேவேந்திர சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம், விஸ்வகர்மா சங்கம் என வரிசையாக மாலை அணிவிக்க, காமராஜர் எரிச்சல் அடைந்து, "இந்த ஜாதிச் சனியன்களை சென்ட்ரல் ஸ்டேசனிலே மூட்டைக் கட்டி விட்டுறக்கணும்" என்றாராம். (நன்றி - தமிழ் லெமூரியா, மும்பை இதழ்)
 
 
 
வில்வம் கியூபா இன் புகைப்படம்.
 
 
 
ஜிம்முக்குப் போன 4 ஆவது நாளில் கையை முறுக்கிப் பார்ப்பதும், நடைப்பயிற்சி போன 8 ஆவது நாளில் தொப்பைக் குறைந்திருக்கா எனப் பார்ப்பதும் சின்னப் புள்ளைத்தனமா இல்லை. நான் என்னைச் சொன்னேன்.
 
 
 
பயப்படும் அளவு பிள்ளையார் செய்து, வீதி தோறும் விசில் அடித்து, மக்களை விரட்டியும், மிரட்டியும் ஊர்வலம் சென்று, பின்னர் தண்ணீரில் மூழ்கடித்து, தேவைப்பட்டால் கிரேனில் தூக்குமாட்டி, சில நேரங்களில் அடித்தும், உடைத்தும், தொப்பையில் ஏறி நின்றுமாக உங்கள் பக்தியை முடித்து விட்டீர்களா பக்தர்களே?
 
 
 




Friday, September 11, 2015

முகநூல் பதிவுகள்



தொலைக்காட்சிப் பார்ப்பது பார்வைக்கு, சிந்தனைக்கு, உடலுக்குக் கேடு. எனவே ஒரு மாதத்திற்குக் கேபிள் இணைப்பைத் துண்டிக்கலாம் என, எங்களின் 9 வயது மகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்தோம். எனக்கான பொழுது போக்கு என்ன? எனக் கேட்டார் கியூபா. விளையாட்டுகள் அறிமுகம் செய்தோம், நாங்களும் சேர்ந்து விளையாடினோம், வெளியில் நிறைய சென்றோம். விளைவு, ஒரு மாத ஒப்பந்தம் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. குழந்தைகளை மதித்தும், கேட்டும் செய்தால் எல்லாம் சாத்தியமாகிறது.
 
 
 
தமிழக விவசாய மாநாட்டில் மோடி பங்கேற்பார்.
விவசாய ''ஒழிப்பு'' மாநாடு எனத் திருத்தி வாசிக்கவும்.
 
 
 
எப்பவும் பெரியார், அம்பேத்கர், பொதுவுடமைக் கொள்கைதானா.. வேறு எதுவும் தெரியாதா? என நண்பர் கேட்டார்.
மக்கள் ஒற்றுமை ஓங்கவும், வறுமை அகலவும் உங்கள் மதம், உங்கள் ஜாதி, உங்கள் ஆர்.எஸ்.எஸ், உங்கள் பி.ஜே.பி யார் போராடினாலும் அருகில் நிற்போம்.
 
 
 
 
இன்று என் நண்பரின் புது வீட்டை இடித்துக் கொண்டிருந்தனர். "வீடு கட்டி 6 மாதம் கூட ஆகவில்லை, ஏன் இடிக்கிறீர்கள்?" என அதிர்ச்சியாய் கேட்டேன். "வீட்டை இடிக்கவில்லை. வாஸ்து படி கழிவறையை மட்டும் மாற்றுகிறோம்," என்றார். நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. வண்டியில் வரும்போது நானாக நினைத்துக் கொண்டேன். கழிவறையை மாற்ற வாஸ்து என்கிறார்கள். பல பேருக்கு இங்கு மலச்சிக்கல் இருக்கிறதே.. அதைப் போக்க ஏதாவது வாஸ்து இருக்கிறதா? இப்படிப் பார்க்க இருந்தால் "வரும்" அல்லது அப்படிப் பார்க்க இருந்தால் "வரும்" என ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா வாஸ்து நிபுணர்களே?
 
 
 
ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிகப்பாகவும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான சான்று அது.
 
 
 
 
நாகரிக உடையணிந்து, ஒய்யார நடை போட (FASHION SHOW) அழைத்தார்கள். அங்கே எல்லோரும் ஆச்சர்யப்பட கதிர் அறுக்கப் போனார் கியூபா. நீ பரிசு கொடுக்கா விட்டாலும், என் நாகரிகம் இதுதான்டா நண்பா !
 
 
 
 
உன் வரலாறு அத்தனையும் தெரியும் எங்களுக்கு! சிவப்புத் தோல் விரித்தாய்; விழுந்தவனை அழித்தாய். மந்திரம் சொல்லி, மத மயக்கம் கொடுத்தாய். ஜாதி வலையில் சதி பின்னினாய். கடவுளென்ற கயமை கற்பித்தாய். நீ அழித்திடாத அழிவுகளே அரிது. சூழ்ச்சிதானே உன் சூத்திரம். எதுவும் தெரியாதென்று திரியாதே? உன் வரலாறு அத்தனையும் தெரியும் எங்களுக்கு! ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை. ஆறறிவு மக்களுக்கே கேடுகள் பல செய்துள்ளாயே... நீ மேய்த்தாயே ஆடு, மாடுகள்...அதற்கு எவ்வளவு கேடுகள் செய்திருப்பாய்?
 
 
 

இந்த சைவம் சாப்பிடுபவர்கள், "நாங்க சுத்த சைவம். எதுவும் படலையே... எதுவும் கலக்கலையே", என ரொம்பத்தான் பண்றாங்க... நாங்க கூடத்தான் சுத்த அசைவம். ஏதாவது பிகு பண்றோமா?
 
 
 
நிகழ்ச்சி ஒன்றிற்காக உறவினர் வீடு சென்றிருந்தேன். அவ்வீட்டின் பாட்டி திடீரென சாமி (?) வந்து ஆடினார். சிறிது நேரம் கழித்து, ''பாட்டி மலை ஏறிவிட்டதாக'' சொன்னார்கள்.
எனக்கென்னவோ பாட்டி பஸ் ஏறுவதே சிரமம், இதுல எப்படி மலை ஏறும்?
 
 
 
என்.எஸ்.கே இறந்து விட்டதாக அடிக்கடி செய்தி வருமாம். "நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்க. இவங்க திருப்திக்காகவே நான் ஒரு தரம் சாகணும்'', என்பாராம்.
கலைவாணரின் நினைவு நாள் இன்று (30.08.1957)
 
 
 
 
கூட்டங்களில் மணிக்கணக்கில் பேசிவிட்டு, இத்துடன் என் ''சிற்றுரையை'' முடித்துக் கொள்கிறேன் எனச் சிலர் சொல்லும் போது, உடம்பில் பிபி 200 காட்டுகிறது.
 
 
 
16 ஆண்டுகளுக்கு முன், ஜப்பானில் என்னுடன் பணிபுரிந்த ஜப்பானியர் கேட்டார். Where from you? I am from Tamilnadu. Oh.. Where is Tamilnadu? Near India.
உண்மையான தமிழ்த் தேசம் குறித்து நாங்கள் அறிவோம்.
 
 
 
மதவெறி பிடித்த மனிதர்கள் வீட்டில்,
இக் குழந்தையின் படம் இருக்க வேண்டும்!
 
 
 
கடவுளை மனிதரே செய்தார்.
இதோ செய்கிறார் பாருங்கள்!
 
 
 
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
தமிழ்நாட்டை திமுக, அதிமுக - விடம் விட்டுக் கொடுத்தோம். கெட்டுப் போனோம்! இந்தியாவை காங்கிரஸ், பிஜேபி- யிடம் விட்டுக் கொடுத்தோம். கெட்டுப் போனோம்!
ஆக, கெட்டுப் போனவர்களிடம் விட்டுக் கொடுக்காதீர்கள்!
 
 
 
 
தமிழ்நாடு விலைக்கு வருகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் முதலீட்டாளர் மாநாட்டிற்கு வரவும்.
 
 
 
அன்புள்ள அமெரிக்க மக்களுக்கு...
ஒரே ஒருமுறை, ஒரே ஒரு கட்டிடத்தை இடித்ததற்கு 14 ஆண்டுகள் கடந்தும் நினைவு நாள் கொண்டாடுகிறீர்கள். உலகம் முழுக்க நீங்கள் இடித்த கட்டிடங்கள், அடித்த கொள்ளைகள், செய்த கொலைகள் கணக்கில் அடங்காது. உங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உச்சக்கட்ட வெறியோடு இருக்கிறீர்கள். உலகம் முழுவதையும் அழித்துவிட்டு, நீங்கள் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?
 
 
 

Wednesday, August 19, 2015

முகநூல் பதிவுகள்:            




  • ''குழந்தையிலேயே திருமணம் செய்திருந்தால் கோகுல்ராஜ், இளவரசன் உயிர் போயிருக்குமா?'', எனப் பால்ய விவாகத்தை ஆதரித்து ஆர்.எஸ்.எஸ் நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
குழந்தையிலேயே உங்களைக் கொன்றிருந்தால், சமூக விரோதக் கருத்துகளை இப்படி எழுதுவீரா?
(மன்னிக்கவும் நண்பரே)
 
 
 
  • மெட்ரோ வந்ததற்கு நாங்கதான் காரணம். இல்லையில்லை நாங்கதான் காரணம்.
நீங்க ரெண்டு பேரும் வந்ததற்கே நாங்கதான் காரணம், தெரியும்ல.
 
 
 
  • இன்று செய்து, நாளை கெட்டுப் போனால் அது வீட்டு உணவு. இரண்டு மாதம் ஆகியும் 'பாக்கெட்டில்' கெடாமல் இருந்தால், அது விஷ உணவு.
 
 
 
  • என் மகளுக்கு ஆங்கிலம் - தமிழ் புத்தகம் வாங்கிக் கொடுத்தேன். அதில் இப்படி இருக்கிறது.
உங்கள் மொழிப் புலமையில் இடி விழ!
 
 
 
  • ''நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும், இப்புவிக்குத் தாய்என்று காட்ட மனிதர்க்கு வாய்த்தவளே'', எனப் புரட்சிக்கவிஞன் பாடினான்.
''பெண்களைப் பலாத்காரம் செய்வது தவறில்லை'', என்கிறான் பா.ஜ.க ''ராஸ்கல்'' பாபுலால் கவுர்.
 
 
 
  • சென்னை மெட்ரோ பயணம் தொடங்கியது. இதன் பின்னால் இருக்கும், ஒவ்வொரு தனி மனித உழைப்பிற்கும் நம் சிரம் தாழ்ந்த பாராட்டுகள்!
இனி விரைவு, வசதி, சுகாதாரம், மகிழ்ச்சி ஆகியவை நமக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கான கட்டணம் அதிகம்.
 
 
 
  • இலங்கை சரியான பாதையில் போகிறது - கலாம்
ஓகோ... நீங்க போறது சரியான பாதையா மிஸ்டர் கலாம்?
 
 
 
  • ஆர்.கே. நகர் தொகுதியில்
மகேந்திரன் தோற்றால், அது தோல்வியல்ல. ஜெயலலிதா வென்றால், அது வெற்றியல்ல.
 
 
 
  • அடிக்கிற காத்துக்குப் பல்லு ஆடுது.  என்னங்கடா பேஸ்ட் விக்கிறீங்க?
 
 
 
  • ''பார்ப்பனர்களை ஏன் திட்டுகிறீர்கள்'', எனப் புகழ் பெற்ற சிலரும் கேட்கிறார்கள்.
மன்னிக்கவும்! ஒருபோதும் அவர்களை நாங்கள் திட்டியது இல்லை.
பார்ப்பனர்களைப் படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக் கூடாது என்று நாங்கள் சொன்னது கிடையாது.
பார்ப்பனர்கள் கீழ் ஜாதி, நாங்கள் மேல் ஜாதி என்றும் சொன்னதில்லை.
குறிப்பாகப் பார்ப்பனர்களைச் சூத்திரன், அதாவது தேவடியா மகன் என்று நாங்கள் சொன்னதே கிடையாது.
மாறாக அவர்கள் தான் அனைத்தையும் சொல்கிறார்கள். நாங்கள் எதிர்க்கிறோம். அவ்வளவுதான்!
 
 

  • டேய்! இப்படி சாப்பிட்டா எப்படி உடம்பு குறையும்? ஆனந்த விகடன்ல கு.சிவராமன் கட்டுரையைப் படி. போ... போ..
 
 

முகநூல் பதிவுகள்:





  • தவறான தமிழ்த் தேசியம் பேசுபவராக சீமான் மாறிப் போனார். அவரின் தொண்டர்கள் முகநூலில் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். பெரியாரிஸ்டுகளும் அவ்வாறே திரும்பப் பேசுகிறார்கள். பொதுஜனம் இருவரையும் தரக்குறைவாய் நினைக்கக் கூடும். கொள்கையைப் பேசும் போது நிதானம் தேவை என்றவர் பெரியார்.
 
 
 
  • மதங்களை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், உங்கள் சோற்றில் மண் அள்ளிப் போட்டது போல துடிக்கிறீர்கள். ரம்ஜான் அன்று 115 இஸ்லாமியர்களை, ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அமைப்பே கொன்றுள்ளது. இதன் பிறகும் நீங்கள் ஒரு முடிவுக்கு வராவிட்டால், உங்கள் மதங்களே ஜெயிக்கட்டும். மனித இனம் அழியட்டும்.
 
 
 
  • உங்களால் முடியாத எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதுங்கள்.பின்னர் கிழித்து விடுங்கள் அல்லது புதைத்து விடுங்கள். இனி உங்களால் எல்லாம் முடியும்.
 
 
 
  • ''உடமைகள் காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல'' - மருத்துவமனைகளில் அறிவிப்பு.
உயிரோடு வரும் மனிதர்களே, உங்களிடம் காணாமல் போகிறார்கள். நாங்க ஏதாவது கேட்டோமா?
 
 
 
  • எண்ணற்ற அப்பாவி மக்களை இந்து மதம் கொலை செய்கிறது. அதை இஸ்லாம் கண்டிக்கிறது. இஸ்லாம் செய்யும் கொலைகளைக் கிறிஸ்துவம் கண்டிக்கிறது. அதேபோல கிறிஸ்துவம் செய்யும் கொலைகளை இஸ்லாம் கண்டிக்கிறது. ஆக எல்லா மதங்களும் கொலை செய்கின்றன. கொலை செய்யும் இப்படியான மதங்கள் எதற்கு?' என நாம் கேட்டால், மூன்று பேரும் ஒன்றாய் சேர்ந்து கொண்டு, ''எல்லா மதங்களும் மக்களுக்கு அன்பையே போதிக்கின்றன'', என்கிறார்கள். உங்ககிட்ட போயி இந்த உலகம் மாட்டிக்கிருச்சே என்பது தான் எங்களின் பெருங் கவலை!
 
 
 
  • 3000 பள்ளிகளை மூடிய இராஜாஜி தமிழ்நாட்டில் வசித்தவர். 3000 பள்ளிகளைத் திறந்த காமராஜர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர். பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா!
 
 
 
  • ''சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துக்கள் கிடையாது'' - சுப்பிரமணிய சாமி.
நல்லா சொல்லுங்க சாமி... நாங்க சொன்னா எங்க பயல்களுக்கு உறைக்காது.
 
  
 
  • கிறிஸ்தவர்கள் வேண்டாம் என்று சொல்கிற ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடிகள் அவர்கள் கண்டுபிடித்த ட்விட்டர், பேஸ்புக்கில் இருந்து உடனே வெளியேற வேண்டும்.
     
     
     
    • ''திருந்தவில்லை பாகிஸ்தான்'' - தினமலர் செய்தி.
    அதைத் திருந்தாத தினமலர் சொல்லக் கூடாது.
     
     
    • முதுகுக்குப் பின்னால் ஒரே காரியம் தான் செய்ய வேண்டும் நண்பர்களே!
    அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாய் இருக்க வேண்டும்!
     
     
     
    • திருச்சியில் இரயில்கள் குறித்துத் தகவல் கூற, தமிழ்த் தெரியாத ஒரு இந்திக்காரர் பணியில் உள்ளார். நாம் ஏதாவது கேட்டால், நேலாவது பிளேட்பாம், ரெண்டுது பிளேட்பாம், மருரை இரயி இப்ப போம் என நம்மை ரொம்பப் படுத்துறார். நாம என்ன சொல்றோம், ''வட இந்தியாவில் இந்தி தெரியாத ஒரு தமிழனை வேலைக்கு வைக்காதீர். அது மாதிரிதான்டா இங்கயும்...
     
     
     
    • வாழ்வின் முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் பிறக்கவில்லை. இன்னொருவர் இறந்துவிட்டார்.
     
     
     
    • தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களுக்கு:
    இந்தியாவின் நீதித்துறை, நிருவாகத் துறை, பத்திரிகைத் துறை என எல்லாமும் பார்ப்பனர்களிடம் உள்ளது. நீங்கள் சொல்வதைப் போல பிற மாநில மனிதர்கள், தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ளனர். அதைத் தடுக்க நாங்களும் உங்களுடன் இணைந்து வருகிறோம். இந்தியாவின் பிற மாநில மக்களின் ஆதிக்கத்தையே ஒழிக்க முற்படும்போது, இந்தியாவுக்கே தொடர்பில்லாத வேறு நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்களை நீங்கள் ஏன் விட்டு வைக்கிறீர்கள்? பார்ப்பனர்கள் என்பவர்கள் தமிழர்கள் இல்லை, இந்தியர்கள் இல்லை. அவர்கள் ஆரியர்கள், வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாறு சொல்கிறது, பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்களும் சொல்லிவிட்டனர். சமஸ்கிருதமே எங்கள் மொழி என பார்ப்பனர்களும் கூறுகின்றனர். நம் தமிழ் ஆட்சிமொழி, ஆலய மொழி, நிருவாக மொழி ஆகாமல் இருப்பதற்கு நம் ஆட்சியாளர்கள் ஒரு காரணம் என்றால், பார்ப்பனர்கள் பலவகையில் காரணமாக இருக்கிறார்கள். தமிழையும், தமிழர்களையும் பார்ப்பனர்கள் கால் தூசியளவு கூட மதிப்பதில்லை. ஆக தெலுங்கு, கன்னடம், மலையாளி, வடநாட்டார் நமக்கு ஒரு பகுதி ஆதிக்கவாதிகள் என்றால், முழு ஆதிக்கம் நிறைந்தவர்கள் பார்ப்பனர்களே. தமிழ்நாட்டிற்குள் மற்றவர்களைத் திட்டமிட்டு திணிப்பதிலும் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு யாரெல்லாம் பகைவர்கள் என நீங்கள் சொல்வது எல்லாம் சரியே. பகைவர்கள் பட்டியலில் பார்ப்பனர்களைச் சேர்க்காமல் போராடினால், நம்மால் நிச்சயம் ஜெயிக்க முடியாது.
     
     
     
    • சீனாவில் வசிக்கும் என் நண்பர், ''தமிழகத்தில் இருக்கும் வந்தேறியே வெளியே போ'', எனப் பதிவிடுகிறார். நீயும் வேறு நாட்டில் பிழைக்கிறாய். ''வந்தேறி தமிழனே வெளியேறு'', எனச் சீனாக்காரன் சொன்னால், உன் நிலைமை என்னாவது?
    ஈழத்தில் ஆபத்து ஏற்பட்ட போது, அய்ரோப்பிய நாடுகள் தான், நம் தமிழர்களை அரவணைத்துக் கொண்டது. அவர்களும், ''வந்தேறி தமிழனே வெளியே போ'', என்றால் அவர்கள் நிலைமை என்னவாவது?
    உண்மையில் தமிழ்நாட்டில் வந்தேறிகளை விரட்ட வேண்டுமெனில், முதலில் பார்ப்பனர்களையே விரட்ட வேண்டும். ஆனால் ''கைபர் கணவாய் வழியாகத் திரும்பிப் போ'' என நாங்கள் சொல்வதில்லை. வந்தது வந்துட்ட... வாழ வழி கொடுத்த எங்கள் மக்களுக்குத் துரோகம் செய்யாதே என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். நாங்க நிதானமா சொல்றோம், கேக்க மாட்டேங்கிற. பார்ப்பான் தூண்டிவிட்டா குதிக்கிற.
     
     
    • பள்ளி மாணவி மது அருந்தியதை எப்படி சிந்திப்பது?
    1. இந்தியாவிற்கு அமெரிக்கக் கலாச்சாரம் தரமாக வந்து விட்டதையா?
    2. ''இவர் மாணவியாக இருக்கும் போதே மது அருந்துவார்'', என்ற விதியை எழுதிய கடவுளையா?
    3. நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்லாத சமூகத்தையா?
    4. இந்நிகழ்வில் இம் மாணவி இரண்டாம் குற்றவாளி. ஆக முதல் குற்றவாளி யார்?
     
     
    • ''பணம் செலுத்துமிடம்'' (cash counter) எனும் கண்ணாடிக் கூண்டை, மருத்துவமனை மற்றும் பள்ளிக் கூடங்களில் காணும் போது வயிறு எரிகிறது.
     
     
    • பிறர் வென்றால் கைதட்டு
    நீ வென்றால் கைகட்டு.
     
     
     
    • பகத்சிங்கிடம் தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று கூறினார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். கம்யூனிசமும், பெரியாரியமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது.
     
     
     
    • கடவுள் இல்லை என ஏதாவது ஒரு அர்ச்சகரிடம் சொல்லுங்கள்...
    ''இது ஒரு பெரிய கண்டுபிடிப்பா? எங்களுக்குத் தெரியாததை இவுக சொல்ல வந்துட்டாக...'' எனச் சலித்துக் கொள்வார்.
     
     
     
    • இங்க வாங்க! நீங்களும், நாங்களும் தனித்தனிக் கொள்கையைப் பேசிக்கிட்டு எவ்வளவு நாள்கள் இப்படியே இருப்பது? நாம ஒன்றாகச் சேரணும். அதுக்கு என்ன வழி, நீங்களே சொல்லுங்க?
     
     
     
    • பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த வேண்டும் - உயர்நீதி மன்றம்
    பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசும் நடக்க வேண்டும்.
     
     
 
 
 
முகநூல் பதிவுகள்:


 
    
  • புதுக்கோட்டையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு (70 கி.மீ) பாதயாத்திரைப் போவதை நேற்று பார்த்தேன். அதில் 10 வயது சிறுமி ஒருவர் நடக்க முடியாமல் அழுகிறார். அவரின் அம்மாவோ தரதரவென இழுத்துப் போகிறார். குழந்தைகள் அதிகம் நடக்கக் கூடாது என்பதற்காகவே 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளியை உருவாக்கினார் காமராசர். இந்தத் தாயோ, தன் மகளை 70 கிலோ மீட்டர் நடக்க வைத்து அழகு (?) பார்க்கிறார்.
 
 
 
  •  பெரியாரிஸ்டுகள் பார்ப்பன எதிரியா? பார்ப்பனீய எதிரியா? எனச் சிலர் கேட்கிறார்கள். பெரியார் பார்ப்பனக் கருத்துகளையே ஒழிக்க நினைத்தார், பார்ப்பனர்களை அல்ல. பின்னது நோக்கமாக இருந்திருந்தால், எப்பொழுதோ கதை முடிந்திருக்கும்.  
 
 
 
  • 'முஸ்லிம் என்றாலே தீவிரவாதி' என்பது தினமலர் கருத்து. ஆனால் அப்துல் கலாம் என்கிற முஸ்லிமுக்கு தனி மலர் தயாரித்து, அதில் விளம்பரம் வெளியிட்டு, ஒரேநாளில் இலட்சக்கணக்கில் பணம் பார்த்து விட்டார்கள்.
'பார்ப்பானைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்' எனப் பெரியார் சும்மாவா சொன்னார்.
 
 
 
''எல்லோரும்
சொல்கிறார்கள்''
என்பது
ஒரு
அழகான பொய்!
 
 
 
  • இந்தியாவில் உள்ள அனைவரும் அவரவர் மாநிலத்திற்குச் சென்று விடுங்கள், அவரவர் தாய்மொழியைப் பயன்படுத்துங்கள் என்றால்...
தமிழர்கள் - தமிழ்நாடு, தமிழ்.
மலையாளிகள் - கேரளா, மலையாளம்.
தெலுங்கர்கள் - ஆந்திரா, தெலுங்கு.
மராத்தியர்கள் - மும்பை, மராத்தி.
குஜராத்திகள் - குஜராத், குஜராத்தி.

பிராமணர்கள் - ? ?
 
 
 
  • எங்கள் வீட்டிற்கு மூன்று இளைஞர்கள் வந்து, கோவிலுக்கு நன்கொடைக் கேட்டனர். ''நான் சாமியை நம்பமாட்டேன். ஆனால் உங்களை நம்பி ரூ 100 தருகிறேன். உங்கள் செலவுக்கு ஆகட்டும்'', என்றேன். தேவையில்லை என்றனர் கோபமாக!
உங்களுக்கே உங்கள் சுயமரியாதை முக்கியம் எனில், எனக்கு என் சுயமரியாதை எவ்வளவு முக்கியம்!
 
 
 
  • சிலர், நிமிர்ந்து சென்றால் நேரம் செலவாகுமே எனக் குனிந்து செல்கிறார்கள்.
 
 
 
  • ''வந்தேறியே வெளியே போ'', எனச் சில அமைப்புகள் சொல்வதைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அதை ஏன் பார்ப்பனர்கள் வீட்டு அடுப்படியில் இருந்து சொல்கிறார்கள் என்பது தான் புரியவில்லை!
 
 
 
  • ''பெரியார் எங்களின் எதிரி'', என நாம் தமிழர்கள் சொல்கிறார்கள். பரவாயில்லை, இருக்கட்டும்.
ஆனால் ''பார்ப்பனர்கள் எங்கள் நண்பர்கள்'' என்கிறார்களே! அதைத்தான் கடுகளவும் ஜீரணிக்க முடியவில்லை.
 
 
  •  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற போது அவர்கள் அலறினார்கள். அவர்கள் வீட்டில் காதல் திருமணம் நடந்த போது அமைதியானார்கள்.
விதவை மறுமணம் வேண்டும் என்ற போது அவர்கள் அலறினார்கள். அவர்கள் வீட்டில் அப்படி ஒன்று நடந்த போது அமைதியானார்கள்.
இப்படி அலறுவதும், அமைதியாவதுமாக தமிழர்கள்!
 
 

  • சண்டைக்கு இருவர் தேவை. அதில் ஒருவராய் நீங்கள் இருக்காதீர்கள்.புதியதோர் வாழ்வு செய்வோம்!
 
 
 
  • சென்ற வார எனது பேருந்துப் பயணத்தில், அருகில் இருந்தவர் கைப்பேசியில் சத்தமாகப் பேசினார். 'ஏன் இவ்வளவு சத்தம்?' என்ற கேள்வியோடும், எரிச்சலோடும் பயணித்தேன். இன்று என் நண்பனோடு பேருந்தில் போனேன். எனக்கொரு அழைப்பு வர, பேசியபடி வந்தேன். கைப்பேசியை வைத்ததும், நண்பன் சொன்னான், ''பொது இடத்தில் சத்தமாகப் பேசாதே, அடக்கி வாசி'', என்றான். நான் எதுவும் கூறவில்லை. மன்னிப்பு மட்டும் கேட்டுக் கொண்டேன்.
 
 
 
  • பெரியாருக்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் முப்பாட்டன் ஒரு மருத்துவர், என் பாட்டன் ஒரு வழக்கறிஞர், என் தாத்தா ஒரு பொறியாளர். நாங்கள் எவருக்கும் அடிமையாய் வாழ்ந்ததில்லை. எங்களுக்குச் சுயமரியாதையைப் பெற்றுத் தந்தவர்கள் ஆரியர்கள். எங்களின் கல்விச் செலவுகளைப் பிராமணக் கல்வி அறக்கட்டளையே ஏற்றது. நாங்கள் மட்டுமல்ல, எங்கள் தமிழினமே 2000 ஆண்டுகளாக இப்படித்தான் சிறப்போடு வாழ்ந்தது. எனவே எங்களுக்கும், பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
 
 
 
  • தன்னுடன் போட்டி போட்டு, வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான், ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.
வாழ்வில் எல்லா நண்பர்களும் வெற்றி பெற என் வாழ்த்துகள்!