Sunday, December 28, 2014

ரஜினி !

இந்து மத நம்பிக்கைகள் போல, ரஜினி என்கிற மூட நம்பிக்கையாலும் தமிழர்கள் இழந்தது அதிகம்.

மதிப்பிற்குரிய மருத்துவர்!

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்
செங்குட்டுவன் அவர்களுக்கு வணக்கம்!
எங்கள் மகள் "கியூபா" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.
அப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்!
அதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.
நல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.
ஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள்! அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்!

முற்போக்காளர்கள் வசம்!

மோடியின் ஒவ்வொரு வெற்றியும் முற்போக்காளர்களுக்குத் தோல்வி! அது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் என அனைத்துக்கும் பொருந்தும். நாம் தாம்   எப்போதும் எதிர்க்கிறோமே என்பது இங்கு பதில் இல்லை. அவர்களின்  ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கான கேள்வி. 

சூத்திர மோடியைத் தலைவனாக ஏற்று, பார்ப்பனர்கள் சாதிக்கின்றனர். மோடிக்கு, காங்கிரஸ் பரவாயில்லையோ எனச் சிலர் யோசிக்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இருவரும் தமிழரைச் சிதைக்கின்றனர்.

மத்தியில் எவர்  வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது என்கிற  நிலை வேண்டும். அதற்கேற்ற அரசியல் அமைப்புகள்  வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முற்போக்காளர்கள் வசம் வர வேண்டும்!      

மனிதனைக் கொல்லும்!

இந்து வெறி, இந்துக்களைக் கொல்லும்.
இசுலாம் வெறி, இசுலாமியர்களைக் கொல்லும்.
கிறிஸ்துவ வெறி, கிறிஸ்துவர்களைக் கொல்லும்.
ஆக மதம் மனிதனைக் கொல்லும்!

வேர்களை வெட்டுங்கள்!

பாஜக, ஆர்.எஸ்.எஸ், மோடி வகையறாக்கள் இந்து மதம் என்ற பெயரில் பல வன்முறைகள் செய்கின்றனர். இதைக் கண்டிக்கும் பலர், பார்ப்பனர்களை (பிராமணர்களை) ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.  பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து மதம் ஆகியவற்றை உருவாக்கியவர்கள் பார்ப்பனர்கள். அந்தப் பார்ப்பனீயத்தை ஒழிக்காதவரை இந்தியாவிற்கு அமைதி கிடைக்காது.
ஒரு நச்சு மரத்தின் வேர்கள் பார்ப்பனர்கள். அதன் கிளைகள் நம்மவர்கள். கிளைகளை மட்டுமே அகற்ற நினைக்கும் நாம், வேர்களை வெட்டுவது எப்போது?

முதல் அடி!

கடவுள் உண்டு என்கிற தமிழனும், இல்லை என்கிற தமிழனும் அடித்துக் கொள்கிறான். கடவுளை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மதத்தை ஆதரிக்கும் தமிழனும், வெறுக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். மதத்தை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஜாதியில் ஈடுபாடு உள்ள தமிழனும், ஜாதியை ஒழிக்க நினைக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். ஜாதியை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்- இல் இருக்கும் தமிழனும், பெரியார் அமைப்பில் இருக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். ஆர்.எஸ்.எஸ் - யை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

உலகிலேயே இப்படி ஒரு கொடுமை எந்த இனத்திற்காவது உண்டா?

Saturday, December 27, 2014

கீதையில் என்ன இருக்கிறது?

கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே! எனக் கீதையில் இருப்பதாகக் கூறுகின்றனர். 700 க்கும் மேற்பட்ட சுலோகங்களில் ஒன்றில் கூட அப்படிக் கிடையாது. வேறு என்ன இருக்கிறது?
நால்வருணம் கொண்ட மக்கள், தத்தம் குலத்தொழிலைச் சரியாகச் செய்ய வேண்டும். அதற்குக் கூலியை எதிர்பார்க்கக் கூடாது என்றுதான் கீதையில் உள்ளது. ஆனால் வள்ளுவரோ...
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி - தன்
மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
உன் உழைப்புக்குக் கண்டிப்பாய் ஊதியம் உண்டு என்கிறார் வள்ளுவர். நீ என்ன உழைத்தாலும் உனக்கு ஊதியம் கிடையாது என்கிறது கீதை. இப்போது சொல்லுங்கள் தேசிய நூலா கீதை?

அறிவால் முட்டாள்கள்!

கங்கைஅமரன், இளையராஜா இருவரும் இசையால் மேதைகள். அறிவால் முட்டாள்கள். பார்ப்பனத் தன்மையோடு, பார்ப்பன அடிமையாய் வாழ்பவர்கள். ஏற்கெனவே இந்துத் தர்மப்படி இவர்கள் அடிமை ஜாதி. மேலும் தங்கள் ஜாதியைக் கேவலப்படுத்தும் வேலைகளை இவ்விருவரும் தொடர்ந்து செய்கிறார்கள். ஒரே வரியில் சொல்வதானால் தமிழினத் துரோகிகள்!

ஆச்சார்யம்!

கொலை செய்தவனுக்குச் சிலை வைப்பதில் என்ன ஆச்சர்யம்? அது ஆச்சார்யம் - கோட்சே 

எங்கள் கொள்கை!

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுபவர்கள் குறைவு", என்கிறான் நண்பன். இருந்துவிட்டுப் போகட்டும்! எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு மண்டபகங்கள் சுலபமாகவும், நாங்கள் துணி எடுக்கச் சென்றால் கடைகள் காலியாகவும் இருக்கின்றன.
எங்கள் கொள்கை எங்களுக்கு எந்தச் சிரமமும், நெருக்கடியும் கொடுப்பதில்லை

புத்திசாலி!

நான் ஒரு முட்டாளுங்க.. நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.. நான் ஒரு முட்டாளுங்க.. என இரவு 10 மணிக்குப் பாடிக் கொண்டிருந்தேன். எட்டு வயது கியூபா, "நல்லா படிச்ச நாலு பேரு சொன்னா நீ முட்டாள் ஆயிருவியா எனக் கேட்டார்? நான் முட்டாளா இல்லையா என்பது இங்க பிரச்சினை இல்ல.. நல்லா படிச்ச நாலு பேரு புத்திசாலி இல்லைங்கிறது கியூபாவுக்குத் தெரிஞ்சிருக்கு.

மக்கள் மகிழ்ச்சி!

அமெரிக்காவும், கியூபாவும் ஒன்று சேர்வதாய் செய்திகள் வருகின்றன. அடாவடியை அமெரிக்கா குறைத்துக் கொண்டதா? இல்லை... சுயமரியாதையைக் கியூபா சுருக்கிக் கொண்டதா? ஆச்சர்யம் எப்படியும் இருக்கட்டும். உலகம் அமைதியானால், மக்கள் மகிழ்ச்சியாவர்!

தமிழக வீழ்ச்சி!

தமிழர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்சிக்கு அல்லது நடிகருக்குத் தங்களை எழுதி வைத்து விடுகிறார்கள். தான் சாகிறவரை தன் கட்சியையோ, நடிகரையோ சாகவிடுவதில்லை. தமிழர்களின் பொதுத் தன்மையற்ற, இந்தச் சார்புத் தன்மைதான், தமிழகத்திற்குப் பெரும் வீழ்ச்சி!

நடிங்க பாஸ்!

கொஞ்சம் நடிங்க பாஸ்!
"அதிதீவிர கருத்துகளை ஆர்.எஸ்.எஸ்.பேசினால் பிரதமராக நீடிக்க மாட்டேன்"- மோடி        
அட்ரா சக்கை... அட்ரா சக்கை.. அட்ரா சக்கை...

மோடி

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மனிதராக மோடி இருக்கிறார் - தினமலர்
உண்மைதான்! ஒரு கொலைகாரர் பிரதமராக வந்துவிட்டாரே என்பது கூட தினமும் பேசப்படுகிறது                

ஜாதிச் சனியன்!

மும்பைத் தாராவி பகுதிக்குக் காமராஜர் அவர்கள் பேசச் சென்றுள்ளார். அவர் பேசுவதற்கு முன், நாடார் மகாஜன சங்கம், ஆதி திராவிட மகாஜன சங்கம், தேவேந்திர சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம், விஸ்வகர்மா சங்கம் என வரிசையாக மாலை அணிவிக்க, காமராஜர் எரிச்சல் அடைந்து, "இந்த ஜாதிச் சனியன்களை சென்ட்ரல் ஸ்டேசனிலே மூட்டைக் கட்டி விட்டுறக்கணும்" என்றாராம். (நன்றி - தமிழ் லெமூரியா)

நீயா? நானா?

திருச்சியில் செய்தியாளர்கள் சிலர், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள். ஒரு காவலர், அவர்கள் செய்தியாளர்கள் எனத் தெரியாமல் மறித்து, வண்டியில் இருந்த சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். செய்தியாளர்களுக்குக் கோபம். வண்டியை சாலையின் நடுவிலே நிறுத்தி விட்டார்கள். போக்குவரத்து நெருக்கடி கூடிவிட்டது. சாவியை எடுத்த காவலர் தூரத்தில் இருந்து கத்துகிறார். இவர்களோ வண்டியை எடுக்காமல், காவலரை இங்கே வா என அழைக்கின்றனர். அப்போது அங்கே வந்த வேறு ஒரு காவலர், இவர்கள் செய்தியாளர்கள் என அறிந்து பிரச்சினையை முடித்து வைக்கிறார். ஏன் சாவியை எடுத்தீர்கள் என்றதற்கு, தலைக்கவசம் அணியவில்லை என்றாராம் காவலர். அதற்கு சாவியை எடுத்துக் கொண்டு, ஏன் அறைக்கு ஓடினீர்கள். காசு வாங்கவா? என்றார்களாம் செய்தியாளர்கள். திருச்சி பிரஸ் கிளப் வழங்கும் "நீயா? நானா? பிராட் யு பை ட்ராபிக் போலீஸ் ஸ்டேஷன்.

பெரியார்!



ஆர்.எஸ்.எஸ்.நோய்க்கான
ஒரே அறுவைச் சிகிச்சை
மருத்துவர்!



Friday, December 26, 2014

வேறு எப்படி?

பாலசந்தர் இறுதி நிகழ்ச்சியை கேலிக் கூத்தாக்கிய ரசிகர்கள் - நீங்க உருவாக்கிய ரசிகர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?

வழி நடத்துங்கள்!

பிரபலமான பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் நல்ல கருத்துகளை முகநூலில் பதிவது இல்லை. மாறாகத் தம் புகைப்படங்கள், பங்கேற்கும் நிகழ்வுகள், சென்னை சென்றேன், சேலம் போவேன் என்கிற தகவல்களே உள்ளன. அதற்கு அய்நூறு விருப்பங்கள் வேறு. முன்னுரிமைக் கருத்துக்கா? முகத்துக்கா? தெரியவில்லை. எனவே பிரபலங்கள் நல்ல கருத்துகளைப் பதிவிட்டு, தமிழ் இளைஞர்களை வழி நடத்த வேண்டும்.

Tuesday, December 16, 2014

வாழ்வின் அழகு!


எத்தனை உடை இருந்தென்ன ?
கருப்புடை வாழ்வை அழகாக்கும்
வாழ்க பெரியார் !

முதல்வரே!

நடிகர் கமலஹாசன் பிறந்த நாளையொட்டி திருச்சியில் ஒரு சுவரொட்டி. "நடிகர்களின் முதல்வரே!" ஏற்கெனவே இங்கு "மக்களின் முதல்வரே" என்பது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்தா என்னாகும்? உலகத் தீவிரவாதத்தின் முதல்வர் அமெரிக்காவே! இந்துத் தீவிரவாதத்தின் முதல்வர் பார்ப்பனர்களே! குடிப்போன நாட்டில், குடிகெடுப்பதில் முதல்வர் சுப்பிரமணிய சாமியே! என்றல்லவா போய்க் கொண்டிருக்கும்?

மருத்துவமனைத் தள்ளுபடி!

எனது உறவினர் ஒருவருக்குத் திருச்சி மாருதி மருத்துவமனையில் ஒரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அவர் ஒரு அரசு ஊழியர். அந்தச் சிகிச்சைக்கு ரூ.28,000 மட்டுமே பெற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசும், மருத்துவமனை நிருவாகமும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனைக் கேட்ட தொகை 82,000 ரூபாய். இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த என் சகோதரர், மருத்துவமனை நிருவாகத்திடம் நியாயம் கேட்டுள்ளார். அவர்களோ அசரவில்லை. பின் கேட்க வேண்டிய விதத்தில் கேட்கவும், நேராக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, நீங்கள் 28,000 மட்டும் செலுத்துங்கள். போதும் என்றார்களாம். நியாமான தொகை 28,000. அவர்கள் கேட்டது 82,000. அதிக வித்தியாசம் இல்லை. வெறும் 54,000 ரூபாய் மட்டுமே அதிகம் கேட்டுள்ளார்கள். இதை இன்னொரு விதத்தில் சொன்னால் என் சகோதரருக்கு ரூபாய் 54,000 தள்ளுபடி. எங்குமே கிடைக்காத நவம்பர் மாதத் தள்ளுபடி !

பகத்சிங் ஆசை!




 
பகத்சிங்கிடம் தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது.

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்!

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்
செங்குட்டுவன் அவர்களுக்கு வணக்கம்!

எங்கள் மகள் "கியூபா" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.

அப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்!
அதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.

நல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.
ஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள்! அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்!

நன்றி!
வி.சி.வில்வம்

Wednesday, December 3, 2014

தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?


 தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா? எனத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா கேள்வி எழுப்பினார்.  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் கூட்டத்தில், "தத்துவத் தலைவரின் சிந்தனைக் கொள்கலன்" என்ற தலைப்பில் நந்தலாலா பேசியதாவது: 

வீரமணி என்கிற ஓவியம்!

ஆசிரியர் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டு. என்னைப்  பிடித்தது அவரின் எளிமை. வீரமணி என்கிற "ஓவியம்" வரைந்த போது பார்த்தவர்கள் இங்குண்டு.  சற்று நெருக்கமாகப் பார்ப்பவர்களும் இப்போதுண்டு. நான் சற்றுத் தள்ளிப் பார்க்கிறேன். தள்ளியிருந்துப் பார்க்கையில் அந்த ஓவியம் பேரழகாய்த் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவின் ஈப்போ நகரில்  நடைபெற்ற தமிழர் மாநாட்டில் அவரைச் சந்திக்கிறேன். அவரின் பேச்சு,அணுகுமுறை என்னை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து பேசுகையில், உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். குரலைப் பாதுகாக்க என்ன செய்கிறீர்கள் என்று  கேட்டேன். எதுவும் செய்வதில்லை என்றார். அதனால்தான் அவரின் குரல் நன்றாக இருக்கிறது. ஒரு சிலரின் பேச்சில் கருத்துகள் நன்றாக இருக்கும், குரல் சரிவராது. ஆனால் ஆசிரியர் பேச்சை இரண்டு, மூன்று மணி நேரம் கூட  கேட்கலாம். திருச்சியில் 30 ஆம் தேதி நடைபெற்ற " சாமியார்கள் ஜாக்கிரதை" என்கிற அவரின் பேச்சைக் கேட்டேன். நிறைய பேச்சாளர்கள் படிப்பதே இல்லை. அரசியல் தலைவர்களோ எல்லா மேடையிலும் ஒரே மாதிரி பேசுவார்கள். ஆனால் ஆசிரியரோ முற்றிலும் வேறுபட்டவர்.   


நானும், நண்பரும் வியந்த சம்பவம்! 

திருச்சியில் மோடி கலந்து கொண்ட கூட்டதிற்கு எதிர்வினையாக திராவிடர் கழகம் சார்பில், கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அதில் நானும் பங்கேற்றேன். அக் கூட்டத்திற்கு மார்க்சிய அறிஞர் ஒருவரும் பார்வையாளராக  வந்திருந்தார். ஆசிரியர் பேசுகையில். ஒரு நூலை எடுத்து மேற்கோள் காட்டிப் பேசினார். அது எந்த நூல் என்று நான் பார்த்து முடிக்கையில், அசந்து போயிருந்தேன். ஆம்! அது தேவபேரின்பன் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் - பொய்யும், மெய்யும் என்ற நூலாகும். நான் மகிழ்ச்சியோடு என் எதிரில் இருந்த அந்த மார்க்சிய நண்பரைப்  பார்க்கிறேன். அவரும் தன்னிச்சையாய் என்னை பார்க்கிறார். நாங்கள் சிரித்துக் கொண்டோம்.காரணம் அந்த நூலை வெளியிட்டவரே அவர்தான். தமிழ்நாட்டில் வெளிவருகிற பெரும்பாலான நூல்களை இயக்கம் கடந்து வாசிப்பவராக ஆசிரியர் இருக்கிறார். அவரின் பரந்த வாசிப்புத் திறன் எங்களை வியக்க வைத்தது. 

படித்த ஆசிரியர்! படிக்கின்ற ஆசிரியே!

ஆசிரியரின்  ஒரு கூட்டம், பத்து நூல்களுக்குச் சமம் என்பேன்.  பொதுவாகப் படித்த ஆசிரியரிடம் மாணவர்கள் படிக்கக் கூடாது என்பார்கள். படிக்கின்ற ஆசிரியரே மாணவர்களுக்குச் சிறந்தவர். நம் நாட்டில் குழந்தைகளை அவமானப்படுத்தும் கல்வி முறைதான்  இருக்கிறது. மதிப்பெண் கல்வி உலகம் முழுவதும் நீக்கப்பட்ட பின்னரும், இந்தியாவில் தொடர்கிறது. எதிர்காலத்தில்  மாணவர்கள் மதிப்பெண் வழங்கி, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆசிரியருக்கு முன் மதிப்பிழந்த கோடிகள்!

ஆசிரியரின்  கொள்கை நேர்மைக்குச் சான்றாக மேலும் ஒரு செய்தி அறிந்தேன். ஆசிரியர் அவர்களின் மாமனார் இறந்த போது அவருக்கு கொள்ளி வைக்கச் சொன்னார்களாம். அப்படி செய்யாவிட்டால் பல கோடி ரூபாய்  சொத்துகளை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டதாம். இறுதியில் ஆசிரியருக்கு முன்னால் கோடிகள் மதிப்பிழந்து போனதாய் அறிந்து மகிழ்ந்தேன். அதேபோல ஜீவா அவர்களின் குல வழக்கப்படி, அவர்களின் சமூக ஆடை அணிந்து கொள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்களாம். கதராடை இழந்து எதையும் செய்ய மாட்டேன் என அவர் உறுதியாக இருந்த வரலாறு இங்குண்டு. இவைகள் இப்போது அல்ல, அந்தக் காலத்திலே நடந்தவை என்பதுதான் வியப்பு. 

நாம் ஒன்றாய் இல்லை!

இப்படியான புரட்சிகள் விதைந்த மண்ணில் வேரூன்ற நினைக்கிறது பாரதீய ஜனதா. காங்கிரஸ் கட்சியில், தலைவர்களைக் கொண்டு தத்துவங்கள் மாறும். ஆனால் பாரதீய ஜனதாவில் எல்லோருக்கும் ஒரே கொள்கை. மனிதனை மனிதனாக மதிக்க மாட்டோம் என்கிற கொள்கை. அய்.ஏ.எஸ். படிப்புக்கு வயதைக் குறைத்து விட்டார்கள். கேட்டால் தகுதி போதவில்லை என்கிறார்கள். அம்பேத்கர் கேட்டார், "தகுதியுள்ளவனே ஆள வேண்டும் என்றால் வெள்ளைக்காரன் அல்லவா ஆளவேண்டும்? இங்கே ஆள்வதற்கு தகுதி அல்ல, உரிமையே முக்கியம் என்றார்". பெரியார், அம்பேத்கரை எல்லோரும் ஏன் பின்பற்றுகிறோம்? அவர்களின் கருத்துகள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டா பாராட்டுகிறோம்? மாறாக சூத்திரன் என்கிற குடையின் கீழ் பெரியாரும், தலித் என்கிற குடையின் கீழ் அம்பேத்கரும் இந்த மக்களை ஒன்று சேர்த்தார்கள். இன்றைக்குப்  பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அதிகம் பேசி வருகிறது. எங்கிருந்து வந்தது இதற்கான தைரியம்? நாம் ஒன்றாய் இல்லை என்பதில் இருக்கிறது அவர்களின் தொடக்கம்.  தருண் விஜயை தமிழ்நாட்டில் சிலர் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு என்ன தேவையோ நமக்குத் தெரியாது. இன்னும் ஒருவர் திருக்குறள் "ஹிந்து" மதத்திற்குச் சொந்தம் என்கிறார். நால்வருணம் பேசிய ஹிந்து மதமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்கட்கும் என்று சொன்ன குறளும் எப்படி ஒன்றாகும்? இந்தச் சூட்சமம் அறிந்த ஆசிரியர் அறிவியல் பூர்வ மறுப்பை விடுதலையில் சிறப்பாகப் பதிவு செய்தார்.

பகவத்கீதை படித்தவர் யார் ?
"எதைக் கொண்டு வந்தாய் எடுத்துச் செல்ல" என நிறைய உணவகங்களில் எழுதி வைத்துள்ளார்கள். நாமும் சாப்பிட்டு முடித்து, இந்த சுலோகத்தைச் சொன்னால் விட்டு விடுவார்களா? அதேபோல கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை எதுவுமே கீதையில் இல்லை என்பதுதான் உண்மை. கீதையைப்  படிக்காமலே பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் ஆசிரியர் அவர்கள் கீதையைப் படித்து, அறிவுசார் மறுப்பு நூலை வெளியிட்டடார். அதற்கான தகுதியும் அவருக்கே உண்டு. வேறெந்த அரசியல் தலைவர்களும் இதைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள். பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, பெரியாருக்குப் பிறகு ஆசிரியர் இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  

தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?

பெரியார் தலித் மக்களின் எதிரி என்று தலித் தலைவர்கள் சிலர்  சொல்கின்றனர். ஜாதி என்பது கோபுரம் போன்ற அமைப்பாகும். அடித்தட்டில் இருந்து மேல் வரை நாம் இருக்கிறோம்.  கலசமாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.  ஏன் தலித் இருக்கிறது? ஜாதி முறை இருக்கிறது. ஜாதி ஏன் இருக்கிறது? இந்து மதம் இருக்கிறது.  இந்து மதம் ஏன் இருக்கிறது? சாஸ்திரம் இருக்கிறது. சாஸ்திரம் ஏன் இருக்கிறது? கடவுள் இருக்கிறார். இப்போது கடவுளை ஒழித்துப் பாருங்கள். ஜாதியும், தலித்தும் சேர்ந்தே ஒழியும். பெரியார் கொள்கை மட்டுமே அறிவியல் பூர்வமான நாத்திகம் என்பதை நாம் உணர வேண்டும். பகத்சிங்கை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர்  பெரியார். தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று பகத்சிங்கிடம் கேட்டார்கள். பேபி கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது. 

தமிழ்நாட்டில் இன்று தத்துவ வறட்சி ஏற்பட்டுள்ளது. அதைப் போக்கும் தகுதி ஆசிரியருக்கு உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு  மனிதனும் ஒரு சாமியாராக இருக்கிறான்.  கால் சாமியார்,  அரைச் சாமியார், முக்கால் சாமியார் என விழுக்காடு அளவில் வித்தியாசம் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து முழு (?) சாமியாரைக் கொண்டாடுகின்றனர். இன்றைக்கு  மூடநம்பிக்கைகள்  நவீனம் கொள்கின்றன. பெரியார் அரசியல் கட்சி நடத்தியவர் இல்லை. கல்வி என காமராஜர் எழுத, பெரியார் எனும் கரும்பலகைத்  தமிழ்நாட்டில் இருந்தது. இந்தியாவில் எங்குமே காண முடியாத சிறப்புகள் தமிழ்நாட்டிற்கு  உண்டு. அந்தச் சிறப்பை இந்த இயக்கம் காக்கும்; ஆசிரியர் காப்பார். அதற்காகவே இந்த பிறந்த நாள் பாராட்டுகள்'', என கவிஞர் நந்தலாலா பேசினார்.  
                                                                                                                                                                  
வி.சி.வில்வம்