Friday, October 22, 2010

பணம் மனிதனுக்கு கவுரவத்தை வழங்குமா?

"பணம் என்னடா, பணம் பணம்? குணம் தானடா நிரந்தரம்! "என ஒரு பாடல் உண்டு.
அது நூறு விழுக்காடு சரியானது. ஆனால்
 நடைமுறையில் பணம் தான் முதலிடத்தில் மதிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி,
 பணம் ஒன்றுதான்
மனிதனின் கவுரவத் தைத் தூக்கி நிறுத்தும்
எனவும் கருதப்படுகிறது.

உலகமயமாக்கல் எனும் நச்சுக் கொள்கை வளர்ந்த பிறகு “பணக்காரர் ஆவது எப்படி?” என்கிற நூல்கள் அதிகமாக விற் பனையாகின்றன. தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில், யாராவது ஒருவர் பணம் சம்பாதிப்பது  எப்படி? எனப் பேசிக்  கொண்டிருக்கிறார். இப்படி எழுதியும், பேசியும் பணம் சம்பாதிப்பதே ஒரு தொழிலாகிவிட்டது.
வருமானம் ஈட்டுவது என்பது ஒவ்வொரு தனிமனிதரின் ஆர்வம், முயற்சி, திறமை, உழைப்பு ஆகிய தன்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இங்கே ஒவ்வொரு மனிதரும் தங்களின் திறமைக ளுக்கு ஏற்ப வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அந்த வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனும் அவர்களின் முயற்சியில் தவறில்லை, அது இயல்பானது! ஆனால் அந்தப் பணம்தான் தனது குடும்ப மதிப்பை (கவுரவம்), சமுதாய மதிப்பை உயர்த்துகிறது எனக் கருதினால் அங்குதான் தவறு நிகழ்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு பணம் தான் சமூக மதிப்பைக் கொடுப்ப தாகத் தெரியும். ஆனால் அது உண்மையல்ல.
பணம் என்பது மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவிதான். மற்றபடி பணத் தால் மதிப்பு என்பதெல்லாம் போலியானது, தற்காலிகமானது. ஆனால் இங்கே என்ன நிகழ் கிறது? பணத்தின் மீது பேராசை அல்ல, வெறியூட்டப் படுகிறது. பணம்தான் மதிப்பு, அது ஒன்று மட்டுமே போதுமானது என மூளை யில் ஆணி அடிக்கப் படுகிறது. இந்த ஆணியை மேலும்  இறுகச் செய்யும் வேலை யைத்தான் உலகமயக் கொள்கை செய்து வருகிறது.

“பணத்தை எந்த வகையிலாவது பெருக்கு, அதனால் வாழ்வில் அமைதியை, நிம்மதியை இழந்தா லும் பரவாயில்லை, நமக்கென்று ஒரு ‘கவுரவம்’ வேண்டும். ஒரு வேளை பணம் பற்றாக்குறையாக இருக்கிறதா, கடன் வாங்கு, நாலு பேரிடம் கடன்பட்டாவது ஆடம் பரப் பொருள்களை வாங்கு. அப்போதுதான் நம் கவுரவத்தை நிலைநிறுத்த முடியும்” எனத் தொடர்ந்து மூளைக்கு விளம்பரம் செய்யப்படுகிறது.
சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த ‘கவுரவ நோய்’ மற்ற நோய்களைக் காட்டிலும் கொடும் விஷத்தன்மை கொண்டது. ஒரு தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. அதில்  5 குடும்பங்களை மட்டும் கோடீசுவரர்களாக ஆக்கு வதே உலகமயத்தின் கொள்கை! அதாவது பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக ஆக்கும் வேலை.

இந்த மாயத் தோற்றத்தை உண்மையென நம்பி நாம் உள் ளே போய்விடக் கூடாது. அதிக பட்சமாக நாம் முயற்சி செய்து, உழைத்து வரக் கூடிய பணத் தைக் கொண்டு, திட்டமிட்டு, நிறைவாக, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அது ஒன்று தான் இயற்கையானது; நிரந்தரமானது. ஒருவரிடம் அதிகமான பணம் இருக்கிறது என்பதற்காகவே யாரும் அவரை மதித்துவிடு வதில்லை. அதே நேரம் நல்ல குணம் நிறைந்த ஒருவர் ஏழை யாக இருக்கிறார் என்பதற்காகவே யாரும் மதிக்காமல் இருப்பதில்லை.

எனவே பணம் ஈட்டுவது, பெருக்குவது என்பது வேறு, ஆனால் அதுதான் கவுரவத்தை, சமூக மதிப்பை பெற்றுத்தரும் என நினைப்பது வேறு.  இங்கே சமூக மதிப்பிற்கும், கவுரவத்திற்கும்  பணமே காரணம் என நினைத்ததன் விளைவால் இயந்திரத்தமான மனிதர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். இயந்திரம் என்று ஆன பிறகு அங்கு மனித நேயத்திற்கு இடமில்லை.

எனவே நல்ல குணம் நிறைந்த மனிதர்களே சமூகத் திற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வாறான சமூகம்தான் மனிதர் களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். பணம் என்பது மனிதர்களின் பின்னே வரவேண்டும். மாறாக பணத்திற்குப் பின்னால் நாம் செல்ல நேர்ந்தால் நமக்கு அடிமை வாழ்வுதான் மிஞ்சும். எனவே எதையும் பகுத்தறிந்தே முடிவு செய்வோம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!
                                              வி.சி.வில்வம்

Thursday, October 21, 2010

அறிந்து கொள்வோம் அமெரிக்காவை.. 3




அமெரிக்காவின் நேரெதிர்ச் சொல் கம்யூனிசம். கம்யூனிசம் முழுதும் வேண்டாம், அறிகுறி இருந்தாலே போதும் அமெரிக்கா அழித்துவிடும். சோவியத் ரஷ்யா வைச் “சர்வதேசப் பயரங்கவாத நாடு” என்றே அமெரிக்கா அழைத்தது. இப்போது அந்தப் பயரங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 1960 இல் தொடங்கி 80 வரை இடைப் பட்ட 20 ஆண்டுகளில் மட்டும் 40 ஆட்சிக் கவிழ்ப்புகளை சி.அய்.ஏ. மூலம் முடித்துள்ளது. ஒரு நாட்டு மக்களால் உரு வாக்கப்பட்ட ஒரு ஆட்சியை அமெரிக்காவால் எளிதில் சிதைக்க முடிகிறதென்றால் அதற்குப் பெயரென்ன? அந்தப் பெயருக்குப் பொருள்தான் என்ன? 1948 -54 இடையிலான 6 ஆண்டுகளில் 40 - க்கும் மேற் பட்ட கம்யூனிச எதிர்ப்புத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஓடின.
வியத்நாம், கொரியப் போர் களில் பலப்பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்த வர்கள், இன்றைக்கு ஆப்கானி° தான், ஈராக் மக்களை அழித்து வருபவர்கள், நடப்பில் லெபனான், பால°தீனர்களை அழித்துக் கொண்டிருப்பவர்கள் என்றுதான் அடங்குவார்கள்? வியத்நாம், கொரியா, சூடான், கிரெனடா, ஈக்வடார், ஈரான், நிகரகுவா, ஹெய்ட்டி, மட கா°கர், கினியா - மிஸாவ், ஜைரே, கென்யா, கானா, காங் கோ, பெனின், டான்சானியா, மொரிசிய°, ஜிம்பாவே, மொ சாம்பிக், ஜாம்பியா, எத்தி யோப்பியா, நமீபியா, அங்கோலா, லிபியா, ஜோர்டான், சிரியா, பிலிப்பைன்°, கியூபா, ஈராக், ஆப்கானி°தான், பால°தீனம், லெபனான்... என இவர்கள் குடித்த இரத்தங்கள்தான் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னுமா தாகம் தீரவில்லை? 1931 இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால் வின் கூலிட்ஜ், “போர்தான் அமெரிக்காவின் பிரதான பிசின°. போரைக் கூட நாங்கள் நல்ல பிசினஸாக மாற்றிக் கொண்டோம்,” என்றார்.
எல்சால்வடாரில் “உண்மை மற்றும் நல்லிணக்கக் கமிசன்” மேற்கண்ட புலனாய்வில் உலகில் மனித உரிமை மீறல்கள் 93 விழுக்காடு அமெரிக்காவின் சி.அய்.ஏ. வில்தான் நிகழ்கிறது என்று கூறியது. 93 என்ன நூறே நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்?
அமெரிக்காவின்
கள்ளக் குழந்தை இ°ரேல்!
இருபது நாடுகளை உள்ளடக் கியன அரபு நாடுகள். இவர்கள் அராபியர்கள். வெவ்வேறு நாடுகளில் பிரிந்து, கலந்து வசித்தாலும் இவர்களுக்கான மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் யாவும் ஒன்றே. இந்த நாடு களில்தான் எண்ணெய் வளம் குவிந்துள்ளது. உலகத் தேவை களின் மூச்சாக இருப்பது இந்தப் பெட்ரோலியப் பொருள்கள் தாம். இந்த மூச்சுக் காற்றை அராபியர்களிடம் கொடுத்து விட்டு (அது அவர்களுக்குச் சொந்தமாகவே இருந்தாலும்) வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க அமெரிக்கா என்ன . . . ! (எதையாவது பூர்த்தி செய்து கொள்ளுங்க!) எண்ணெய் வளத்தை முழுக்க அபகரித்து, அரபு நாடுகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். என்ன செய்யலாம்? சி.அய்.ஏ. வின் கீழ் பொறுப்பு ஒப்படைக்கப்படு கிறது. கச்சிதமாக அவர்கள் காரியம் முடித்தார்கள். எப் போது தெரியுமா? 1948 இல்! என்ன செய்தார்கள் தெரியுமா? பால°தீனத்தின் ஒரு பகுதி யையும், ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியையும் அவர்களிட மிருந்து பிடுங்கி, ஒன்றாக இணைத்து, யூதர்களை அங்கு குடியமர்த்தி, “இ°ரேல்” எனப் பெயரிட்டு “ ஹேப்பி பர்த்டே டு யு” பாடிவிட்டார்கள். அன்றி லிருந்து நடந்து வரும் ஒவ்வொன் றையும்தான் உலகச் செய்தி களில் பார்த்து வருகிறோமே!
தீர்வுதான் என்ன?
அமெரிக்க மக்கள் தொகை 28 கோடி. இவர்கள்தான் உலகின் 600 கோடி மக்களுக்கும் ஆட்சி யாளர்கள். உலக நாடுகளுக்குச் சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பவர்கள். உலகின் ஒவ் வொரு நாட்டுக் குடிமகனின் பொருளியலையும் நிர்ணயிப்ப வர்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, அந்நிய முதலீடு, அமெரிக்க எதிர்ப்பு போன்றவை ஏதோ கம்யூனிசம் சார்ந்தது என யாரும் கருதக் கூடாது. அது பிழையாகிவிடும். நம் ஒவ்வொ ருவரின் தனிமனித உரிமை களையும் அமெரிக்கா பறிக்கிறது; நம் ஒவ்வொருவரின் உணர்வு களையும் அமெரிக்கா பாதிக் கிறது! அய்.நா. தலைமைக்கு மாற்றாக அமெரிக்கத் தலைமை வலுவாக முன்னெடுக்கிறது. இவ்வுலகை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்தான் என ஆட்டம் போட்ட ரோம், கிரேக்க சாம்ராஜ்யங்களும், 17 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய பிரெஞ்சு, பிரிட்டிஷ், டச்சு, பெல்ஜியம் °பானிஷ் போன்ற வைகளும் சுருங்கி, சுருங்கி ஒரு வட்டத்திற்குள் வந்துவிட்டன. அதேபோல் “ எங்கள் ராஜ் யங்கள் முடிவில்லாதது,” எனப் பறைசாற்றி வந்த பைசாண் டைன், ஒட்டாமன், ருஷ்யன், மங்கோலியர், முகலாய ராஜ்யங் களும் காணாமல் போனதுடன், வரலாற்றில் கறுப்புக் கோடிட்டுப் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இன்றைக்கு “டாலர்” தேச மான அமெரிக்கா அந்த வேலை யைத்தான் செய்து கொண்டி ருக்கிறது. வரலாறும் கறுப்பு வண்ணம் தீட்டி, அமெரிக்க முடிவை தன் நெஞ்சில் ஏந்த ஆவலோடு காத்துக் கொண்டி ருக்கிறது. ஈராக் போரில் 700 கோடி டாலர் செலவழித்து, 19,000 கோடி டாலர் வென்றது. அமெரிக்கா. எத்தனை மனிதன் செத்தான் என்பதல்ல; எவ்வளவு டாலர் குவிந்தது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே கணக்கு. இன்றைக்கு அமெரிக்காவில் அச்சடிக்கப்படும் டாலரில் சரிபாதிக்கும் மேல் உலகச் சந்தையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பெரிய பலமாக அமெரிக்காவுக்கு இருந்தது.
22 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பா கண்டம் “யூரோ” எனும் நாணயம் வெளியிட்டது. இப்போது டாலருக்குச் சம மாக, டாலரை விட மதிப்பாய் யூரோ வளர்கிறது. உலகச் சந்தையில் டாலர் இருந்த இடம் யூரோவாக மாறி வருகிறது. இந்த யூரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுடனான வணிகம் இனி யூரோவில் தான் இருக்க வேண்டும் என முழங்கிய முதல் “ஹீரோ” சதாம் உசேன்தான். அதனால் தான் அமெரிக்கா அவரை ‘ஜீரோ’வாக்கியது. ஆக டாலரை ஒழிப்பதும், அமெரிக் காவை எதிர்ப்பதுமே உலக அமைதிக்கான ஒரே வழியென பொருளியல், சமூகவியல், அரசி யல், இன்னபிற நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஏறத்தாழ 600 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் மனிதாபி மானம் என்பது ‘அணு’ அள வைவிட மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒன்றிரண்டு நிகழ்வுகளை வைத்து மட்டும் “மனிதாபி மானம் இன்னும் செத்துவிட வில்லை”, என நமக்கும் நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டால் தான் உண்டு.
இவையெல்லாம் ஏதோ உலக விசயங்கள் என நாம் ஒதுக்கிவிடக் கூடாது. ஒவ் வொன்றும் நம் தனிமனித வாழ்க்கையைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். அதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் அது குறித்து நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
(நிறைவு)
வி.சி.வில்வம்

அறிந்து கொள்வோம் அமெரிக்காவை.. 2

ஒப்புதல் வாக்கு மூலம்:

இந்த சி.அய்.ஏ - வின் வேலை ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஒரு நாட்டில் எல்லா மாநிலங்களுக்கும் பொது வாக எப்படி ஒரு மத்திய அரசு செயல்படுகிறதோ, அதுபோலவே உலகில் உள்ள அத்தனை நாடு களையும் ஒவ்வொரு மாநில மாகப் பாவித்து, அவற்றிற் கெல்லாம் மத்திய அரசாக அமெரிக்கா செயல்படுகிறது. இன்னும் ஒரே வரியில் சுருக்கி னால், அமெரிக்க அதிபர், அமெரிக்கா வுக்கு மட்டுமல்ல... உலக நாட்டிற்கே அவர்தான் அதிபர்! இதனை வலியுறுத்தி, செயல் படுத்தவே இந்த சி.அய்.ஏ. அமைப்பு. ஒரு நாடு தனக்கு எந்தளவு ஒத்துழைக்கிறதோ, அதைப் பொறுத்தே அந்நாட்டில் சி.அய்.ஏ. பணி இருக்கும். இவர் களின் நாசகாரச் செயல்களை நாம் பட்டியலிட வேண்டாம். இதோ “ பிலிப் ஆகீ” வருகிறார். இவர் சி.அய்.ஏ. அமைப்பின் முன்னாள் பணியாளர். “கம் பெனியில் உள்தகவல் - சி.அய்.ஏ. நாட்குறிப்பு” என்ற தனது நூலில் சி.அய்.ஏ.வின் முகமூடியை ஹாலிவுட் படம் போல கிழித் தெறிந்துவிட்டார். இதோ பிலிப்ஆகீ பேசுகிறார்.
“ சி.அய்.ஏ. வின் வேலை என்பது ஒரு நாட்டிற்குள் ஊடுருவது, எல்லைகளில் ஊடு ருவது, கிராம விவசாயிகளை அரசுக்கு எதிராக உசுப்பிவிடு வது, குண்டு வைப்பது, நீர், எண்ணெய், பெட்ரோலில் விசம் கலப்பது, எந்தத் தடயமும் இல்லாமல் அரசியல்வாதிகளைச் கொலை செய்வது, அரசியல் தலைவர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவது, பெண் களைப் பயன்படுத்துவது, அர சாங்கம் எதிராகச் செயல் பட்டால் பயங்கரவாதக் குழுக் களை அமைப்பது, கொரில்லா போர் நடந்த நிதி கொடுப்பது, ஆயுதங்களைக் கடத்தி எல்லை களிலும், நாட்டிற்குள்ளும் பரவ விடுவது, தகவல் தொடர்பு சாதனங்களை ஏற்படுத்துவது, இரகசியமாக வானொலி நிலை யங்கள் ஏற்பாடு செய்வது, இவற்றுக்கான தொழில்நுட்பம், கருவிகள், நிபுணத்துவம், நிதி, பாதுகாப்பு போன்றவற்றை அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் உருவாக்குவது, சிலவற்றிக்கு உள்ளூரிலேயே ஏஜெண்டுகளை நியமிப்பது, (இவ்விடத்தில் சுப்பிரமணிய சுவாமி போன்ற வர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) வன்முறை செய்வதற்கென்றே ஒரு குழுவை தயார் நிலையில் வைத்திருப்பது போன்றவைகள் சி.அய்.ஏ. வின் பணிகள்” என பிலிப் ஆகீ எழுதினார்.
அமெரிக்காவில் இது பெரும் பிரச்சினையான நேரத்தில் சி.அய்.ஏ.வின் முன்னாள் இயக்குநர் வில்லியம் கோல்பி மேலும் சில தகவல்களை வெளி யிட்டார். என்ன சொன்னார் தெரியுமா?
“பிலிப் ஆகீ சொன்ன தெல்லாம் சரிதான்! எனக்கும் கூட பல வெளிநாட்டு அரசியல் வாதிகளைக் கொலை செய்ய உத்தரவிடப்பட்டது. சிகரெட், சுருட்டு இவற்றில் விஷம் தடவி அனுப்புவது, விஷப்பூச்சிகளைக் கைத்துப்பாக்கி மூலம் செலுத்து வது, விஷத்துளிகளை உடை களில், காலணியில் பரவவிடு வது, சிகரெட் பெட்டிகளில் கண்ணிவெடி தயாரிப்பது, தேநீர் மற்றும் இருமல் மருந்துகளில் விஷம் சேர்ப்பது, டெலிவிசன் காமிராவில் துப்பாக்கியை மறைத்து வைப்பது, விரல்களில் விஷமோதிரம் அணிந்து கொல் வது போன்ற பல உத்திகள் எங்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டு, அதனை நாங்கள் நடை முறைப்படுத்தியுள்ளோம்”, என்று ஒப்புதல் வாக்குமூல மாகவே கொடுத்தார்.
அமெரிக்க இராஜ்யம்:
இதுபோன்ற வேறு சிலரும் கூட வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இருந்தும் என்ன செய்ய? அமெரிக்காவை யாரும் ஏதாவது செய்துவிட முடியுமா? குறைந்தது கேள்விதான் கேட்டு விட முடியுமா? அமெரிக்கா விற்குப் பல நாடுகள் வெளிப் படையான அடிமைகளாக இருக்கிறார்கள். சிலர் மறை முகமாக இருக்கின்றனர். அள வில்லாமல் கடன் வாங்கியதா லேயே பல நாடுகள் அமெரிக் காவிடம் அமைதிகாக்கின்றன. பணம் தேவைப்படாத நாடு களுக்கு அமெரிக்கக் கலாச் சாரம் போய் சீரழிக்கும். இரண் டையும் மறுப்பவர்களுக்கு அமெரிக்கத் துப்பாக்கிகள் வழி செய்து கொடுக்கும். அப்படியும் அடங்க மறுத்தால் சதாம் உசேன் நிலைதான்!
இதே போன்ற நிலைக்கு ஆளானவர்கள்தானே சிலியின் அலண்டே, வியத்நாமின் ஹோசி மின், லிபியாவின் முகமது கடாஃபி, ஈரானின் மொசாடே, ஈக்வடாரின் வெலா°கோ இபாரா, நிகரகுவாவின் டேனி யல் ஒர்ட்டேகா, ஹெய்ட்டியின் அரி°டைட்... இன்னும் இன்னும் பெரும் பட்டியல்! இவர்களிடம் பாதிக்காத நாடுகள் என ஒன்றைச் சொல்லிவிட முடியுமா? நம் சம காலத்து நிகழ்வான சோவியத் ரஷ்யா! இரண்டாம் உலகப் போரில் பாசிச சக்திகளை ஒழித்துக் கட்டி, பல நாடுகளையும் காப்பாற்றிய வீரம் செறிந்த மண்ணல்லவா சோவியத் மண்! அந்த மண்ணையே குத்திக் கிளறிவிட்டார்களே? தங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகங் களையும் பிய்த்து எறிவதைப் போல சமூகவியலார்கள் கதறி னார்களே... விட்டதா அமெரிக் கா? இறுதியில் அநீதிதானே வென்றது.
சி.அய்.ஏ. வில் பணிபுரிந்த ‘ஜிபினியூ’ என்பவர் தனது ‘முழுப்போர்’ என்ற நூலில் இரஷ்யக் கவிழ்ப்பு குறித்து அப்பட்டமாக எழுதியுள்ளாரே! சோவியத் யூனியனைச் சிதறடிப் பதற்காகவே இசுலாமிய மாண வர்களைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் மத்திய ஆசியாவில் நிகழ்ந்துள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு மட்டும் 22,500 கோடியாகும். இவர்களுக்கு விர்ஜீனியாவின் உளவாளி பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகெங்கும் நாசகார செயலைச் செய்வதற்காகவே இங்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் பல நாடு களுக்கும் பிரித்து அனுப்பப் படுவார்கள். அப்படித் தயார் செய்யப்பட்டவர்கள்தான் இந்தத் தலிபான்கள் (தலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருள்) இந்தத் தலிபான்கள் தான் பின்னாளில் “அல்கைதா” அமைப்பின் தளபதிகளாக மாறிப் போனவர்கள். ஆக உலகின் எந்தவொரு தீவிரவாத, பயரங்கவாதக் குழுக்களுக்கும் அடிப்படை அமெரிக்காதான்!
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜி யாவில் பென்னிங் கோட்டையில் மட்டும் இதுவரை 60,000 பயரங்கவாதிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் ஏதோ இரகசியமாக நடக்கிறது என யாரும் கருதத் தேவையில்லை. சி.அய்.ஏ. செய்யும் அத்தனை அட்டூழிய, நாச காரியச் செயல்களையும் ஒவ் வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும். உலக நாடுகள் படிக்கவே அச்சப் படும் செய்திகளை, அவர்கள் வெளிப்படையாகவே வெளி யிடுகிறார்கள். இவற்றையெல்லாம் நாங்கள்தான் செய்தோம். எங்களை யார் என்ன செய்து விட முடியும்?” என்ற கேள்வி உலக நாடுகளுக்குத் தொடர்ச்சி யான எச்சரிக்கை அறிவிப்பு களாகவே இருந்து வருகிறது.

வி.சி.வில்வம்

அறிந்து கொள்வோம் அமெரிக்காவை...1






இந்தியாவும், இந்து மதமும் கடவுள் சங்கதி மாதிரி! இல்லவே இல்லை ரகம்! அதுபோலத் தான் அமெரிக்காவும்! அமெரிக்கர் என்று எவரும் கிடையாது. அவர்களுக் கென்று தொன்மை எதுவும் இல்லை. செல்வம் கொழிக்கும் செவ்விந்திய மண்ணில் குடியேறிய வந்தேறிகள் தான் அவர்கள். அய்ரோப்பாவில் இருந்து கொள்ளையடிப்பதற் காகவே வெள்ளையர்கள் ஒன்று கூடிய இடம்தான் இன்றைய அமெரிக்கா. ஆக, அமெரிக்கப் பிறப்பே, இந்துக் கடவுள்கள் போல அருவெறுக்கத்தக்கது. ஆக்கிர மிப்பில் பிறந்த அமெரிக்கா, பார்ப்பனரைப் போல தன் குணத் தை மாற்றிக் கொள்ள மறுக்கிறது.
கொலம்பஸ்
எனும் கொள்ளைக்காரன்!இந்தியாவில் இயற்கை வளம் மிகுந்திருப்பதை அறிந்த ஸ்பெயின் மன்னன் ஒரு அறிவிப்பு கொடுக் கிறான். “ இந்தியாவைக் கண்டு பிடிப்பவர்களுக்குப் பணமுடிப்பும், கொள்ளையில் 10 விழுக்காடும் தருவதாக அறிவிக்கிறார். இத்தாலி யின் ஜினோவா எனுமிடத்தில் ஒரு கடையில் வேலை செய்யும் கிறி°டோபர் கொலம்ப° என்பவர் தயாராகிறார். இவர் புதிய இடங் களை அறிவதில் ஆர்வமானவர். 1492 அக்டோபர் 12 இல் அய்ரோப்பாவிற்கும், ஆசியா விற்கும் இடைப்பட்ட ஒரு பகுதி யைக் காண்கிறார். அங்கிருந்த செவ்விந்திய மக்களையும், அரா வாக் மக்களையும் கண்டு, இவர்கள் தான் இந்தியர், இதுதான் இந்தியா எனத் தவறாக எண்ணி, °பெயின் மன்னருக்குத் தகவல் தருகிறார் கொலம்பஸ் அத்துடன் அவரனுப்பிய குறிப்பில், “ இங்குள்ள மக்கள் மிக நல்லவர்கள், சொல்வதை ஏற்கிறார்கள், எளிதில் ஏமாற்ற லாம். அதுமட்டுமின்றி இயற்கை வளங்கள் இறைந்து கிடக் கின்றன. கொள்ளையடிக்க ஆட்கள் போ தாது, பொருள்களைப் பாது காக்கக் கப்பல் போதாது”, எனத் தெரிவிக்கிறான். உடனே ஸ்பெயின் மன்னன் 17 கப்பல்களையும், 1200 கொள்ளையர்களையும் அனுப்புகிறான். கொலம்பஸ் தொடங்கி வைத்த கொள்ளை, இன்று அமெரிக்காவின் கொள் கையாகிப் போனது. மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் எனக் கிறிஸ்டோபர் கொலம்பசை இவ்வுலகம் கொண்டாடுகிறது. ஆனால் அவன் செய்த ஆயிரமாயிரம் படுகொலை கள், அந்நாட்டில் அவனடித்த கொள்ளை ஆகியவற்றை வரலாறு துல்லியமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
செவ்விந்தியர்களின் மண்!செவ்விந்தியர்களின் பூர்வீக மண்தான் இன்றைய அடாவடி அமெரிக்கா! °பெயின் மன்னரால் அனுப்பப்பட்ட கொலம்பசும், அவனுக்குத் துணையாக சில ஆயிரம் பேர்களும்தான் முதலில் நுழைந்தனர். பின்னர் அய்ரோப்பா வின் பல வணிகர்களும், நிலச் சுவான்களும், கொள்ளை உள்ளம் கொண்ட அத்தனை வெள்ளை யர்களும் குழுமினர். வார்த்தை களில் உணர்த்த முடியாத அள விற்குச் செவ்விந்திய மக்களை ஒழித்துக் கட்டினர். 1494 இல் தொடங்கி 1508 வரை முப்பது இலட்சம் செவ்விந்தியர்களைக் கொன்றொழித்ததாக இளம் பாதிரி யாரும், வரலாற்று ஆய்வாளருமான லா° காஸா° என்பவர் பதிவு செய்துள்ளார். இவ்வரலாற்று உண்மைகளை எதிர்காலம் நம்புமா? எனவும் அவர்அய்யப்படுகிறார். அவ்வளவு கொடுமைகள்!

செவ்விந்தியர்கள் செல்வச் செழிப்புடனும், தனித்த நாகரிகத் துடனும் வாழ்ந்தவர்கள். இவர் களையொட்டி வாழ்ந்த கிரீக், சோக்டா, சிக்கராவாப் போன்ற பழங்குடியினரும் ஒன்றுபட்டு வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர். இவர்களைக் கண்டால் சுட்டுத் தள்ள வேண்டும் என வெள்ளை யர்கள் ஒருமித்த முடிவு எடுக் கின்றனர். மேலும் செவ்விந்திய ஆண் கொலை செய்யப்பட்டால் 40 பவுண்டும், பெண்ணின் விலை 20 பவுண்டாகவும் தீர்மானிக்கப் படுகிறது. விளைவு மண்ணின் மைந்தர்கள் அனைவரும் அழிக்கப் பட்டனர். இப்போது ஒட்டு மொத்த செவ்விந்தியப் பரப்பும் வெள்ளையரின் கீழ் வருகிறது.
கறுப்பின சோகம்!அபகரிக்கப்பட்ட மண்ணில் ‘அடிமாட்டு’ வேலை செய்ய ஆள் வேண்டுமே. . . என்ன செய்யலாம் என உண்மையான கறுப்பு மனிதர்களான வெள்ளையர்கள் யோசிக்கிறார்கள். ஆப்பிரிக்க தேசம் சென்றால் ‘ஓட்டி’ வரலா மென கப்பல் எடுத்துச் செல் கின்றனர். துப்பாக்கியால் மிரட்டி யும், சாட்டையால் அடித்துத் துன்புறுத்தியும், கை, கால்களில் விலங்கு மாட்டியும் மனித வேட்டையாடுகின்றனர். இந்த அடிமை வணிகத்தில் மட்டும் 100 கப்பல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. எந்தெந்த கறுப்பர் கள், எந்தெந்த வெள்ளையனின் அடிமை என்பதை அவர்களின் வெற்றுடம்பில் நெருப்பால் அடையாளமிட்டுள்ளனர். இந்த அடிமை வியாபாரத்தில் பல முகவர்களும் ஈடுபட்டு பணம் பார்த்துள்ளனர். ஆக, செவ் விந்தியர்களின் மண்ணில், ஆப்பிரிக்க மக்களின் உழைப்பைக் கொண்டு உடம்பையும், பணத் தையும் அமெரிக்கர்கள் வளர்த்துக் கொண்டனர். அமெரிக்க வரலாற் றை எழுதும் வெள்ளையர்கள் செவ்விந்தியர்களின் சோகம் குறித்து எழுதுவதே இல்லை, பாடத்திட்டங்களிலும் அவர்களின் வரலாறு இடம் பெறவில்லை.
கடவுளின் உத்தரவு!கொள்ளையன் கொலம்பசால் செவ்விந்திய மண் கண்டுபிடிக்கப் பட்டது 1492 இறுதியில்! அதன் பின்னர் ஏறத்தாழ 250 ஆண்டு களில் அதாவது 17 ஆம் -நூற்றாண்டின் இறுதிக்குள் - அட்லாண்டிக் கடல் தொடங்கி, பசிபிக் கடற்கரை வரையிலான நிலப்பரப்பு முழுவதையும் அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டது. இன்றையப் புகழ்பெற்ற நியூ மெக்சிகோ, உடாநெவாடா, அரி சோனா, டெக்சாஸ் , கலிபோர்னியா, கொலராடா போன்றவை மெக்சிகோ நாட்டிலிருந்து ‘ரவுடித்தனம்’ செய்து அபகரிக்கப்பட்ட பகுதி களாகும். “ உலகை ஆட்சி செய்ய இயேசு எங்களுக்குக் கட்டளை யிட்டுள்ளார்” என்பதாகவே பல அமெரிக்க அதிபர்களும் உளறி யுள்ளனர். “ ஆதியில் உலகம் முழுவதுமே அமெரிக்காவாக இருந்தது”, எனச் சொல்லியிருக் கிறார் ஜான்லோக்கே என்பவர்.
அதேபோல 1898 இல் ஜனாதிபதி வில்லியம் மெகின்ஸே என்பவர், “ இறைவன் நம்மை உலக நாடுகளின் அறங்காவலராக நியமித்துள்ளார்” என்று கூறியுள்ளார். “ஈராக்கை அழிப்பது இயேசு எனக்கு இட்ட கட்டளை” என தற்போது புஷ் சொன்னாரே, நினைவிருக்கிறதா? இவரும், அவரும் மட்டுமல்ல, அத்துனை அமெரிக்க அதிபர்களுமே இப்படித் தான் உளறி வருகின்றனர். ஆண்டவன் பெயரைச் சொல்லி, அடிமை நாடுகளை இவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள்? இவர்களின் ஆதிக்க அருவெறுப்பு வளர்ந்தது எப்படி? பார்க்கலாம்!
விதி விலக்கு இல்லாத விசித்திரம் !
கூட்டிக் கழித்துப் பார்த்தால் அமெரிக்காவின் மொத்த வரலாறே அய்நூறு ஆண்டுகள்தான். பல்லாயிரம் ஆண்டுகள் தொன் மை வாய்ந்த பலப்பல வரலாற்று இனங்களை அழித்தொழித்தது இந்த அய்நூறு ஆண்டுகளில்தான்! இன்றைக்கு உலகம் முழுக்க உச்சரிக்கப்படும் வாசிங்டன் பகுதி, 1789 இல் அமெரிக்க முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக வைக்கப் பட்ட பெயராகும். இவர் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். எப்படித் தெரி யுமா? செவ்விந்தியர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சேர்த்துக் கொண்டார். இவர் மட்டுமல்ல. . . தாமஸ் ஜெபர்சன், மாடிசன், மன்ரோ, ஜான்குவின்சி, ஆடம்ஸ் போன்றோரும் கொள்ளையராக விளங்கிய ஜனாதிபதிகள். இவர் களையொட்டியே ஆன்ட்ரு ஜாக் சன், நிக்சன், கென்னடி, லிண்டன் ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன், ஜிம்ஸ் போல்க், ரீகன், எய்சன் ஹோவர், ட்ரூமன், பில்கிளிண்டன், ஜார்ஜ்புஷ் எனப் பதவி வகித்த அத்தனை பேருமே உலகக் கொள்ளையர்கள்தாம்! விதி விலக்கு இல்லாத விசித்திரம் அமெரிக்க வரலாற்றுக்கு மட்டு மே உண்டு. கொள்ளை என்றால் ஏதோ ஒருவரிடம் இருக்கும் பொரு ளைத் திருடிவிட்டு ஓடிவிடுவ தல்ல. அது சாதாரணப் பாணி! அமெரிக்க பாணி முற்றிலும் வேறானது. ஒரு நாட்டிற்குள் புகுவது, அந்நாட்டு மக்களைக் கொண்டே அந்நாட்டு வளங் களைக் கொள்ளையடிப்பது, எதிர்ப்ப வர்களை ஒடுக்கி அடக்குவது, அதிகபட்சமாக கொலை செய் வது, அரசாங்கம் எதிர்ப்பானால் ஆட்சி மாற்றம் செய்வது, பிரதமர், அதிபர்களைப் படுகொலை செய் வது, இவ்வளவிற்குப் பிறகும் அங்கேயே சுதந்திரமாக உலா வருவது எனப் படுபயங்கரமான முதல்தரக் கொள்ளையர்கள். சாதாரண வார்த்தைகளில் சொல்வ தானால் “திருடர்கள்”!
அமெரிக்கத் தீவிரவாத அமைப்பு:அமெரிக்காவில் ஒரு தீவிர வாத அமைப்பு இருக்கிறது. அதற்கு சி.அய்.ஏ என்று பெயர் (ஊஐய - உநவேசயட iவேநடடபைநnஉந யபநnஉல) இது 1947 இல் அந்நாட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது. உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத் திருக்க, உலகம் முழுவதையும் கொள்ளையடிக்க, கொலை செய்ய, வன்முறைகளைத் தூண்டிவிட அமெரிக்காவின் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனமே இந்த சி.அய்.ஏ. உலகமே நிம்மதியற்றுக் கிடப்ப தற்கு இந்த சி.அய்.ஏ. தான் காரணம் என்றால் அது சற்றும் மிகையல்ல. இதன் செயல்பாடு களைப் படிக்கும் போதே நமக்குக் குருதி உறைந்து போகிறது. அப்படியிருக்க, இதனால் பாதிக்கப் படுவோர் குறித்து நம்மால் உணரவே முடியாது. இந்த அமைப்பிற்கு 1949 இல் அமெரிக்கா சுய அதிகாரம் வழங்கியது. அப்போது அதற்குரிய நிதியாக 42 இலட்சம் டாலர் வழங்கப்பட்டது. மூன்றே ஆண்டுகளில், அதாவது 1952 இல் 8கோடியே 20 இலட்சம் டாலர் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த அமைப்பின் வீரியத்தை அறிய, இந்த நிதி ஒதுக்கீடே நமக்கு உதவும்.

எதிர்காலச் சந்ததி தண்ணீர் இன்றிச் சாகும்!






2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலகின் மிகச் சிறந்த 620 விஞ்ஞானிகள் பாரிஸ் நகரில் கூடினர். அய்.நா ஆதர வோடு இயங்கும் அய்.பி.சி.சி எனப்படும் “இன்டர் கவர்மென்ட் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச்” என்ற அமைப்புதான் அவர்களை அழைத்திருந்தது. இவர்கள் அனை வரும் சேர்ந்து உலகின் வெப்ப நிலை பற்றிய ஓர் அறிக் கையைச் சமர்ப்பித்தார்கள். அதில் உள்ளவை நம்மை வியர்க்க வைக்கும் செய்திகளாகும்.
அதாவது கடந்த நூற்றாண்டில் உலகின் வெப்ப நிலை முன்பை விட 0.74 அளவுக்கு உயர்ந் திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் கடந்த 150 ஆண்டுகளில் மிக வெப்பமான 11 வருடங்கள் 1995 க்கு பிறகு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வெப்ப அதிகரிப்பால் என்ன விளைவுகள் ஏற்படும்? 114 நாடு களைச் சேர்ந்த 560 விஞ்ஞானி கள் 4 நாள்களாக கலந்து பேசி, சில செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
முதற்கட்டமாக பனிமலைகள் உருகிக் கடலின் நீர்மட்டம் உயரும். இதனால் கடற்கரையோரப் பகுதி யினருக்கு ஆபத்து ஏற்படலாம். கடலின் அமிலத் தன்மை மாறி, கடல் வாழ் உயிரினங்கள் வெகு வாக அழியத் தொடங்கும். புல் வெளிகள் குறைந்து, பயிர்கள் விளைச்சல் கெடும். தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் எனப் பல அதிர்ச்சி தகவல்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வெப்ப நிலை உயர்வால் பாதிக்கப்படும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள். அதன் விளைவுகள் கடந்த 2 ஆண்டுகளாகவே நமக்கு நேரிடையாகத் தெரிய ஆரம்பித் திருக்கின்றன. கங்கைச் சமவெளியின் பெரும் பகுதி பாலைவனமாக மாறிக் கொண்டே வருகிறது. வட மாநிலங்களில் கோதுமை விவசாயம் முற்றிலு மாக குறைந்து போய் விவசாயிகள் தற்கொலை செய்ய ஆரம்பித்தி ருக்கிறார்கள்.
காடுகள் அழிய ஆரம்பித் துள்ளன. இமயமலையில் இருக்கும் பனிச் சிகரங்கள் சமீபமாக மெல்ல உருக ஆரம்பித்திருக்கின்றன. இதே வேகத்தில் அவை உருகி னால் 2035 ஆம் ஆண்டில் இமய மலையே இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்திருக்கிறது அய்.நா அமைப்பு. இந்தியாவின் ஜீவ நதிகளான கங்கை, யமுனை போன்ற வை அந்தப் பனிச் சிகரங்களைத் தான் நம்பி இருக்கின்றன.
பனி உருகுவதால் முதலில் கடும் வெள்ளம் ஏற்படும். இதனால் பயிர்கள் பாதிக்கும். பின்னர் அந்தத் தண்ணீர் தீர்ந்த பிறகு நதிகள் சமவெளிப் பகுதி களாகிக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். தற்போது இந்தியாவில் தனிநபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1,820 கன மீட்டர் தண்ணீர் நுகர்வு இருக்கிறது. இதுவே 2050 இல் 1,140 கன மீட்டராக குறைந்து விடும். அதாவது 2030 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியரின் தண்ணீர் தேவைக்கு 38 சத வீதம் தான் கிடைக்கும். அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 50 கோடி பேர் தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுவார்கள். உணவு, தானிய உற்பத்தி 30 சதவீதம் குறையும், அரிசியும், கோதுமை யும் 17 சதவீதம் குறையும், இதனால் விலைவாசி கடுமையாக உயரும். இதுதவிர 25 சதவீத தாவரங்களும், விலங்குகளும் அழியும்.
இந்த நூற்றாண்டின் இறுதி வாக்கில் கடல் நீர் மட்டம் 40 சதவீதம் உயர வாய்ப்பிருக் கிறது. இதனால் சுமார் 5 கோடி கடற் கரைவாசிகள் தங்கள் குடியிருப் பை மாற்ற வேண்டியது வரும். சர்வதேச அளவில் உலகம் வெப்பமடைவதைத் தடுக்கும் முயற்சிகள் மிக மோசமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தனி நபரும் தனது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதால்தான் உலக வெப்பம் அதிகரிப்புக்குக் காரணம் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆகும். அந்த வகையில் உலக வெப்பத்தில் மூன்றில் ஒரு பங்கு காரணம் அமெரிக்கர்கள்தான். இவர்களை ஒப்பிடும் போது இந்தியர்களால் மாசுபடுவது 25 மடங்கு குறைவு தான். உலக வெப்பம் அதிகரிக்கக் காரணம் கார்பன் டை ஆக் சைடு, மீத்தேன், நைட்ரசஸ் ஆக்°சைடு ஆகிய வாயுக்கள் காற்றில் அதிகரிப்பதுதான்.
கடந்த 50 ஆண்டுகளில் இத் தகைய வாயுக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதற்கு என்ன காரணம்? பெருகி வரும் வாகனங்கள், மின்சார விளக்குகள், கணினிகள், எரி சக்திப் பொருள்கள், விமானங்கள், பிளா°டிக் பொருள் கள், மரங்களை அழித்தல் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின் றன. இவற்றை நாம் அதிகளவில் பயன் படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக வெளியாகி உலகம் வெப்பமயமாகிறது. வளரும் நவீன யுகத்தில் இவற்றை மாற்ற முடியாது என்பதால் உலக வெப்பத்தின் விளைவையும் நாம் சந்தித்தே ஆக வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம். அந்த வகை யில் இந்த 2008 ஆம் ஆண்டு கோடை காலம், முன் எப்போதை யும் விடக் கடுமையாக இருக்கும் என்கிறார்கள். இயற்கையைச் சீண்டிப் பார்த்ததின் விளைவை இவ் வுலகம் நிச்சயம் அனுபவிக்கும்.
வி.சி.வில்வம்

Wednesday, October 20, 2010

நீங்கள் சாப்பிடும் உணவில் சுண்ணாம்பு, செங்கற்பொடி, குதிரை சாணம்!

கலப்பட உணவு பொருள்களைப் பயன் படுத்துவதால் ஆண்மை இழப்பு, கருச்சிதைவு, புற்றுநோய் ஏற் படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குநர் தீட்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்: மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் அவசிய மான பொருள் உணவு. இன்றைய காலகட்டங்களில் பொருள்கள் போதுமானதாக வும், தரமானதாகவும் கிடைப்ப தில்லை. இந்தியாவில் சற்றொப்ப 45 சதவிகிதம் பேர் ஆரோக் கியமான உணவின்றி கலப் படப் பொருள்களால் பாதிக்கப் படுகின்றனர்.
இவற்றைப் பயன்படுத்துவ தால் மனிதனுக்குப் பலவித மான நோய்கள் ஏற்படுகின் றன. சமூக விரோதிகள் சிலரே உணவுப் பொருள்களில் கலப் படம் செய்கின்றனர். கலப் படத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் உள்ள ‘அக்மார்க்’ ஆய்வகங்கள் மூலம் உணவுப் பொருள்களுக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கப்படுகிறது.
உணவுப் பொருள்களில் கலப்படத்தால் வரும் நோய் கள்: அரிசியில் மண், மணல் போன்றவை கலப்படம் செய்யப் படுவதால் வயிற்று நோய்கள் ஏற்படுகின்றன. துவரம் பருப் பில் கேசரிப் பருப்பு , கல், களி மண், உருண்டைகளைக் கலப் படம் செய்வதால் கால் வாதம், ஜீரணக் கோளாறு ஏற்படு கிறது. உணவு எண்ணெயில் பிரமத்தண்டு எண்ணெய் கலப்பதன் மூலம் கண் பார் வை பாதிப்பு, இதய நோய், கல்லீரல் வீக்கம், கால்களில் வாதம் ஏற்படுகின்றன. நெய் யில் வனஸ்பதி, மிருக உணவுக் கொழுப்பைக் கலப்படம் செய்யப்படுவதால் இதய நோய், முகவீக்கம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
தேனில் கலப்படம் செய்யாப் படும் சர்க்கரை பாகு, வெல்லப் பாகு போன்றவற்றால் நெஞ்சு வலி, வயிற்றுப் போக்கு ஏற்படு கிறது. தரமற்ற அரிசிமாவு, சோளமாவு, ஈயக்குரோமேட் ஆகியவற்றை மஞ்சள் தூளு டன் கலப்பதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை, பெண்க ளுக்கு கருச்சிதைவு ஏற்படு கிறது.மிளகாய்த் தூளில் மரத் தூள், செங்கற்பொடி, காங்கே ரெட் போன்ற பொருள்களை கலப்படம் செய்வதால் கண் பார்வை
மங்கல், சிறுநீரக
வீக்கம் ஏற்படுகிறது. மல்லித் தூளில் குதிரை சாணம், மரத் தூள் ஆகியவற்றைக் கலப் படம் செய்வதால் ஜீரணக் கோளாறு, இதயநோய் ஆகிய வற்றால் மக்கள் பாதிக்கப் படலாம்.
கரும்பு வெல்லத்தில் சுண் ணாம்பு, சாம்பல் போன்றவை கலப்படம் செய்வதால் வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியவை ஏற்படும். காபித்தூளில் புளியங் கொட்டையை, வறுத்து அரைத்து கலந்து பயன்படுத்து வதால் கர்பப்பைக் கோளாறு, மூளை, தோல், குடல் அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.
ஐஸ்கிரீம், பிஸ்கெட், கேக், குளிர்பானங்களில் செயற்கைச் சாயங்களைக் கலப்படம் செய்யவதால், தொடர் தலை வலி, அலர்ஜி, இறுதியில் புற்று நோய்க்கு வழி வகுக்கிறது.
எனவே ‘அக்மார்க்’ உணவுப் பொருள்களை பயன்படுத்தி னால் உடல் நலத்தையும், பணத் தையும் சேமிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-வி.சி.வில்வம்

குடி குடியைக் கெடுக்கும்! அமெரிக்க குடி உலகைக் கெடுக்கும்!

உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். எங்களின் கோகா - கோலா முற்றிலும் பாதுகாப்பானது. இதைவிடப் பாதுகாப்பானது வேறில்லை. எங்களின் உற்பத்தி இடத்திற்கே வந்து பார்த்துக் கொள்ளுங் கள்.”
இப்படித்தான் கெஞ்சிக் கொண்டிருந்தது, கோலா நிறு வனம். எதற்காக மான அவமானம் பாராமல் இப்படி விளம்பரம் வெளியிடுகிறார்கள்? அவர்களின் தயாரிப்பான கோகா - கோலா, பெப்சி போன்றவற்றின் விற்பனை ‘கொஞ்சமாகப்’ பாதித்துள்ளது. (அதிகம் பாதிக்கவில்லை. என்ன தான் பூச்சிக் கொல்லி மருந்து இருந்தாலும் ருசித்துக் குடிப் போம் என்கிறார்கள் இந்தியர்கள்) இதோ இன்னும் சில தினங் களில் வெப்பம் கடுமையாகி விடும். அதற்காகக் கோலா நிறுவனமும் பூச்சி மருந்து கலக்கப்பட்ட குளிர் பானங்க ளோடு சந்தையில் தயார் நிலையில் உள்ளது.

கோலா, பெப்சியில் பூச்சி மருந்து புதுதில்லியில் உள்ள, தரச் சான்று பெற்ற ஒரு தனியார் நிறுவனம் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஒன்றை நடத்துகிறது. இது கோகா- கோலா, பெப்சிகளில் தரமான அளவிற்குப் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருப்ப தாக அறிவித்தது. இந்தத் தனியார் நிறுவன அறிவிப்பைப் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் ஆய்வு செய்து உண்மைதான் என உறுதிபடுத்தியது. வயல் வெளிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், கரப்பான் பூச்சிகள், மூட்டைப் பூச்சிகள், போன்றவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள்தான் கோலா, பெப்சியிலும் கலக்கப்பட்டுள் ளன. “கோலா- பெப்சி குடியுங் கள், ஒரே கலக்கல்தான்” என அந்நிறுவனம் விளம்பரம் செய் கிறது. இந்தக் கலக்கல் என்பது அந்தக் கலக்கல்தான் என்ப தைக் குடிப்பவர்கள் உணர வேண்டும். உணர மறுத்துக் குடித்தால் கல்லீரல், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம், புற்றுநோய், ஆண்மைக் குறைவு, பிறவிக் கோளாறுகள், பாலியல் குறைபாடுகள், மூளை கோளாறுகள் என மொத்தத் திற்கும் ஆபத்து. “ குளிர்பானம் அருந்த வேண்டாம், அது உடலுக்குக் கேடு” என ஒற்றை வரியில் சொன்னால் யாரும் கேட்பதில்லை போலும்! அதனால் தான் ஒவ்வொரு உறுப்புகளை யும் தனித்தனியாகக் குறிப்பிட்டு மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கோலா பிறந்த கதை
1890 இல் அமெரிக்காவின் நீயுபெர்ன் எனுமிடத்தில் ‘காலேப் பிரேட்காம்’ என்பவரால் தயாரிக்கப்பட்டதுதான் இக் குளிர்பானம். இவர் ஒரு மருந்து தயாரிப்பாளர். அப்போதைய நிலையில் இக்குளிர்பானம் வயிற்று வலியைப் போக்குவ தாகக் கருதப்பட்டது. 1903 இல் புட்டிகளில் நிரப்பி விற்றார். இவர் எதிர்பார்ப்பு போல் விற்பனை இல்லாததால் ‘ராய்சி மெகர்ஜெல்’ என்பவருக்குக் குளிர்பான உரிமத்தை விற்பனை செய்தார். இவர் அக்குளிர் பானத்திற்கு கோகா- கோலா எனப் பெயரிட்டு உற்பத்தியைத் தீவிரமாக்கினார். இக்குளிர்பானத் தை முதலில் தோற்றுவித்த காலேப் பிரேட்காம் என்ப வரின் நோக்கம் நல்லதாய் இருந்திருக்கிறது. ஆனால் ‘பார் முலா’ தவறு. அமெரிக்காவின் எந்த ஒரு பொருளும் உலக மக்களுக்கு ஏதாவது ஒரு கெடுதல் செய்ய வேண்டும்.


ஆனால், இக்குளிர்பானம் 1890 -களில் வயிற்றுவலியைச் சரி செய்திருக்கிறது. அதனால் தான் ‘பிரேட்காம்’ தோற்றுப் போனார். அடுத்து வந்த ‘மெகர் ஜெல்’ மகா புத்திசாலி. வயிற்று வலியை உண்டாக்கும் குளிர் பானத்தை உற்பத்தி செய்தார். கரப்பான் பூச்சி, மூட்டைப் பூச்சி விஷத்தைச் சேர்த்தார். இன்று 200 நாடுகளில் கொடி கட்டிப் பறக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரை 1977-களில் (பெரா சட்ட காலங்களில்) பெப்சி - கோலா துரத்தப்பட்ட ஒரு நிறுவனம். அதன் பின்னர் 1993 - களில் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தது. இன்று இதன் வளர்ச்சி பிரமிப்பாய் உள்ளது. நஞ்சு கலந்த ஒரு பொருளை ‘பிரமிப்பாய்’ விளம்பரம் செய் தால், அதைக் ‘கவுரவமாய்’ நினைத்து அருந்துபவர்கள் நம் மக்கள். திரைப்படங்களில் அநீதி கண்டு பொறுக்காத வரும், ஏழை எளிய மக்களுக்குச் சதா உதவும் கதாநாயகர்கள் தான் இந்தக் கேடுகெட்ட குளிர்பானங்களின் விளம்பர தாரர்கள். இந்தி நடிகர் அமிர் கான் ஒருமுறை சொன்னார். “கோகா- கோலாவை இந்தியா வில் தடை செய்தால் அமெரிக்கா சென்று குடிப்பேன்” என்று. இந்தியாவின் கோலாவும், அமெரிக்காவின் கோலாவும் வேறு வேறு. அமெரிக்கத் தயாரிப்பு தீங்கற்றது என்கிற அடிப்படையை அமீர்கான்கள் அறிய வேண்டும். சொந்த மக்களின் வாழ்க்கையை விட பத்து ரூபாய் அமெரிக்கக் குளிர்பானம் இவர்களுக்கு உயர்வாகிப் போனது. கோலாவை விட நாறுகிறது இவர்களின் இந்தியத் தேசியம்.

கேரள மண்ணின் சோகம்
பெப்சி - கோலா என்பது ஒரு குளிர்பானம், அது நஞ்சு கலந்தது என்பது மட்டும் செய்தியல்ல. அந்த அந்நியர் களால், இந்த புண்ணிய(!) பூமி இரண்டாகப் பிளக்கப் போ கிறது. இந்தியாவின் நிலத்தடி நீர் படு பாதாளத்திற்குப் போய் விட்டது. இன்னும் 10 ஆண்டு களில் பெரும் பூகம்பங்களை நாம் சந்திக்க வேண்டிவரும் என்கிறார்கள் நீர்வள ஆராய்ச்சி யாளர்கள். கேரளாவில் பாலக்காடு அருகே இருப்பது பிளாச்சி மடா கிராமம். செழுமைக்குப் பெயர் போன அவ்வூரில் கோலா நிறுவனம் கால்பதித்தது. மூன்றே ஆண்டுகளில் நீர் நிறைந்த பிளாச்சிமடா நீக்கமற சுடு காடானது. நீருக்குள்ளேயே வாழ்ந்த அம்மக்கள் இன்று குடிநீருக்காக அலைகிறார்கள். பல மைல்களுக்கு அப்பால் பூமிக்குள் சென்றுவிட்டது தண்ணீர். மேலும் பல மாசுக ளுக்கு உட்பட்டு, மனிதத் தேவை களுக்குப் பயன்படுத்த முடியாத நீராகவே அது மாறிவிட்டது. இதன் விளைவாக பெயரிடப் படாத பல நோய்கள் பிளாச்சி மடா மக்களை மரண பயம் கொள்ளச் செய்கின்றன. சோறு சமைத்தால் சில மணிநேரத்தில் கெட்டுப் போகிறது. அவ்வூர் மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சென்ற ஆண்டு 59 ஆவது சுதந்திர நாளை இந்தியா கொண்டாடியது. பிளாச்சிமடா மக்கள் அன்றைய தினம் தண்ணீருக்காகப் போராடி உதை வாங்கினார்கள். ஒரு அமெரிக்க நிறுவனத்தைப் பாது காக்க சொந்த நாட்டு மக்களை யே வெளுத்து வாங்கியது சுதந்திர அரசு. தன் மக்களுக்கு அடிப் படைத் தேவையான தண்ணீ ரைத் தருவது ஒரு அரசின் இன்றியமையாமை. ஆனால் இருக்கின்ற நீரையும் லிட்ட ருக்கு 1.50 காசு வீதம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட்டது அரசு. எல்லாவற்றையும் முடித்து விட்டு 59 ஆவது சுதந்திர தினத் தையும் பலத்த காவல்துறை துணையோடு ‘ஜெய்ஹிந்த்’ கூறி முடித்திருக்கிறார்கள். பாவம் பிளாச்சிமடா மக்கள்! அவர்க ளுக்குள் எந்த தேசிய உணர்வும், சுதந்திர உணர்ச்சியும் ஏற்பட வில்லை. ஏனெனில் அவர்கள் செத்துதான் நாளாகிப் போனதே!

“பிளாச்சிமடா நீரை உறிஞ்சு வதற்கு கோக் நிறுவனத்திற்கு எல்லா உரிமைகளும் உண்டு “ என கோக்கிற்கு எதிரான ஒரு வழக்கில் கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அறியாமை யால் அல்லல்படும் மக்களுக்கு அரசும், நீதிமன்றங்களும் தானே பாதுகாப்பு. அவர்களும் மக்க ளுக்கு எதிராகிப் போனால் இந்த மக்கள் என்னதான் செய் வார்கள்? எங்குதான் போவார்கள்?

தமிழர் தம் சிந்தனைகள்
தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கேட்டால், ஓடோடிச் சென்று தண்ணீர் கொடுத்து, கூடவே மோரும் கொடுத்தது நம் தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று . . . ? காசு கொடுத்தால் மட்டுமே தாகம் தீரும். தண்ணீரை இலவச மாய் கொடுக்காதே, ஒவ்வொரு குவளை நீரையும் பணமாக்கு என்கிறது அமெரிக்கா. அந்த வியாபாரத்தையும் எங்களிட மே கொடு என்கிறது. தண்ணீரும், காற்றும் மனித உயிர். ஒரு லிட்டர் மனித உயிர் இன்று 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அது வும் நமது இரத்தத்தை எடுத்து, நம்மிடமே விற்று கொள்ளை யடிக்கிறார்கள். நூறு விழுக் காடும் இலாபம்! ஏற்கெனவே அமெரிக்காவின் மான்சாண் டோ நிறுவனம் இந்திய விவ சாயத்தின் அத்தனை தளத்தை யும் பிடித்துவிட்டது. அவர்கள் விதை கொடுத்தால்தான் பயிரிட்டு உண்ண முடியும் என்ற நிலை. இப்போது தண்ணீரும் அவர் களிடம் போய்விட்டது. அமெரிக் கரிடம் எந்த வம்பும் செய்யா மலிருந்தால் தான் சோறும், தண்ணீரும் கிடைக்கும் என்ற நிலை. நமது சுதந்திர இலட் சணமும், வல்லரசு தம்பட்டமும் கடைக்கோடி இந்தியனுக்கும் தெளிவாய் தெரியும் நேரமிது.
காடுகள், இயற்கை வளங்கள், விவசாயம், தொலைப்பேசி, மின்சாரம், மருந்து வணிகம், கல்வி, சுகாதாரம், சில்லரை வணிகம், வங்கிகள் என மொத்த மும் அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் வசம் போய் விட்டன. இதன் விளைவுகளை அனுபவிக் கும் காலமும் இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் காலங் களில் காசு கொடுத்தால் மட்டு மே தண்ணீர் என்ற நிலை வரும். அப்போது தண்ணீர் இன்றியே ஏழைகள் சாகக் கூடும். இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

வி.சி.வில்வம்

தீவிரவாதத்தை ஒழிக்கப் போராடும் இந்து, இசுலாம், கிறிஸ்துவம்!


இந்தியாவில் பல்வேறு மா நிலங்களிலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வரு கின்றன. மனிதநேயத்தையும் அமைதியையும் விரும்பும் யாரா லும் இதைச் சகித்துக் கொள்ள முடியாது.
ஆனால் கூட்டத்தில் திருடி விட்டு, திருடன் திருடன் என எல்லோரும் கத்தும் போது, திருடனும் சேர்ந்து கத்துவானே அதுபோல இருக்கிறது பா.ஜ.க கதை.
எல்.கே.அத்வானி தொடங்கி, அடிமட்டத் தொண்டன் வரை வன்முறைக்கு எதிராகப் பேசுவது நமக்குப் புல்லரிக்கிறது.
இதன் உச்சக்கட்டமாக திருச்சி யில் ஒரு ஆர்ப்பாட்டத்தை பா.ஜ.க செய்துள்ளது. அதாவது இந்தியா வில் தொடர் தாக்குதலைக் கண்டித்து தீவிரவாதியின் உருவப் பொம்மையைச் செருப்பால் அடித்துள்ளார்கள்.
இன்று நடக்கும் குண்டு வெடிப்புகள் எல்லாமே “மறு விளைவு” என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அங்கொன் றும் இங்கொன்றுமாக குண்டுகள் வெடித்து சிலர் இறக்கும் போது பத்திரிகைகள் கூட படபடத்துப் போகின்றன. தீவிரவாதம் தான் தலைப்புச் செய்தியாக வெளிவரு கிறது. உள்பக்கச் செய்திக் கட்டு ரைகள் முழுவதும் இதுபற்றியே பேசுகின்றன. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகள் என ஆண் டு, மாதம், தேதி வாரியாக அட்ட வணையும் வெளியிடுகின்றன. ஒரு நாவல் எழுதுவ தைப் போல சுவரா°யமாக, திகிலாக செய்தி வெளியிடுகின்றன.இருக்கட்டும், இப்படித்தான் எழுத வேண்டும். ஒரு வன்முறையை மக்களிடம் இப்படித்தான் படம் பிடித்துக் காட்ட வேண்டும். பல்வேறு புகைப்படங்களையும் வெளி யிட்டு வன்முறைக்கு எதிராக மக்களை இப்படித்தான் திரட்ட வேண்டும்.எல்லாம் சரிதான்! ஆனால் இதில் வேறு என்ன கோளாறு?
இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்து 20 பேர் இறந்து விட்டால் படபடக்கும் பத்திரி கைகள், இந்துத் தீவிரவாதிகள் குண்டு வைத்து 2000 பேர் இறந் தால் மவுனம் காக்கிறதே? எங்கே போனது இந்தப் படபடப்பு?
எங்கே போனது தலைப்புச் செய்தி? எங்கே போனது செய்திக் கட்டுரை மற்றும் அட்டவணைகள்?
மசூதியை இடிப்போம், இசு லாமியர்களை வெறிகொண்டு தாக்குவோம், கொலை செய் வோம், வன்முறை செய்வோம் என ஒன்றன் பின் ஒன்றாக இந்துத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்கு தல் தொடுத்து வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரை ‘தீவிரவாதம்’ என்பதைத் தங்களின் கட்சிக் கொள்கையாக வே பா.ஜ.க மற்றும் அதன் சார்பு அமைப்புகள் வைத்துள்ளன. அப்படியிருக்கும் போது இந்தத் தீவிரவாதக் குழுக்களையும் அம்பலப்படுத்த வேண்டியது பத்திரிகைகள் கடமையல்லவா?
அந்தப் பக்கம் வன்முறை நடந்து ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். அதிலிருக்கும் சிலர் எதிர்த் தாக்குதல் நடத்தி, இந்தப் பக்கம் சிலர் இறக் கின்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்தபோது அமைதி காத்து விட்டு, இப்போது மட்டும் புலம்புவதில் என்ன பயன்?
இரண்டையும் ஒரு சேர கண்டித்தால் தானே அது மனிதத் தன்மை! இல்லாவிட்டால் அதற்குப் பெயர் மதத் தன்மையாயிற்றே.
இந்துத் தீவிரவாதியையும், இசுலாமியத் தீவிரவாதியையும் ஒரு சேர வெறுப்பதுதானே நேர் மையின் அழகு.
இசுலாமியர் வெட்டப்படும் போது எனக்கு அக்கறையில்லை என்று இருந்தால், பின்னாளில் நமக்கொரு பாதிப்பு வரும்போது, அது எப்படிப் பொது நலமாகும்?
குஜராத்தில் மரங்களைப் போல மனிதனை வெட்டினார் கள். வைக்கோல் போரைப் போல ஒன்று சேர்த்துக் கொளுத்தி னார்கள். அப்போதெல்லாம் பத்திரிகைகளும், மற்றவர்களும் என்ன செய்தார்கள்?
சக மனிதனின் கோர மரணத் தைப் பற்றிக் கவலைப்படவில் லையே? பா.ஜ.கவுக்கு எதிராகப் புரட்சி வெடிக்கவில்லையே? இன் றைக்குத் தீவிரவாதப் பொம்மை யைச் செருப்பால் அடித்து நாடகம் ஆடுகிறார்களே, அப்படிக்கூடச் செய்யவில்லையே?
பார்ப்பனர்களுக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்பட்டுவிடக்கூடாது என மாபெரும் மனித நேய இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். அந்த வகையில் நாம் மனிதநேயத்தை மூச்சுக்காற்றாய் நேசிக்கிறோம்.
இதற்கு எதிராக யார் செயற் பட்டாலும் அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டியது நம் கடமை. அப்படியின்றி தீவிரவாதம், வன் முறைக் கண்ணோட்டத்தில் பார பட்சமாக இச்சமூகம் நடந்து கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நாமும் உயிர் கொடுக்க வேண்டியிருக்கும்.
உலகில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென வாய் கிழியப் பேசுகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவால்தான் உலகில் தீவிரவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென வாய் கிழியப் பேசுகிறது பா.ஜ.க. ஆனால் இவர்களால்தான் இந்தியாவில் தீவிரவாதம் தினம் தினம் உயிர் பெற்று வருகிறது.
ஆக இந்து மற்றும் இசுலா மியத் தீவிரவாதத்தை ஒழிக்க இங்கு பொதுவான, தூய மனிதர் கள்தான் தேவை. அப்படி நாம் இருப்போம்.

வி.சி.வில்வம்

Tuesday, October 19, 2010

கோவில்களால் நிம்மதி இழந்து தவிக்கும் மனிதர்கள்!


மனித சமூகத்திற்கு கோவில் என்பது தேவையற்ற ஒன்று. அது மட்டுமின்றி அறவே ஒழிக்கப்பட வேண்டிய ஒரு தீங்குமாகும். தமிழ் நாட்டுக் கோவில்களில் நேற்று மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சி களைக் கீழே படியுங்கள். பக்தரின் சங்கிலி பறிப்பு, அம்மனின் நகை பறிப்பு,கோவில் விழாவில் கல்வீச்சு, குழு மோதல், வழக்கு, அடிதடி என ஊர் மக்கள் ‘ரெண்டு பட்டு’ நிற் கின்றனர். இதுதேவை தானா? நல்ல ஆரோக்கியமான சமூகத்திற்கு நேர்மையான மனிதர்கள் மட்டு மே போதுமானது. கடவுள்கள் மற்றும் இத்யாதி சங்கதிகள் எதுவும் தேவையில்லை. இதோ கோவில் களால் ஏற்பட்ட கொடூரங்களை வாசியுங்கள்!
ஈரோடு மாவட்டம், ஈரோடு - சத்தி முதன்மைச் சாலையில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கோபால் என்பவர் பூசாரியாக உள்ளார். நிகழ்வன்று கோபால் வெளியே சென்றிருந்தார். அவரது மனைவி பத்மாவதி கோவிலில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், அம்மனுக்குப் பூமாலை அணிவிக்க வேண்டும், பூசாரி எங்கே? என பத்மாவதியிடம் கேட்டார். பூசாரி வெளியே சென்றிருக்கிறார் எனக் கூறிய பத்மாவதி அந்த நபரிடம் இருந்து பூமாலையை வாங்கி அம்மனுக்கு அணிவித்து, பூஜை செய்து கொண்டிருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திய அந்த நபர் கருவறைக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையைத் திருடிக் கொண்டு ஓட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்மா வதி, அந்தத் திருடனை விரட்டிச் சென்று பிடித்தார். அவன் கையில் இருந்த நகையை வாங்கக் கடுமை யாகப் போராடினார். இரண்டு பேரும் மாறி மாறி இழுத்ததில் நகை அறுந்தது. இதில் பத்மாவதி கையில் பாதி நகையும், திருடன் கையில் பாதி நகையும் கிடைத்தது. அந்த நகையுடன் அவன் தப்பி ஓடிவிட்டான். பட்டப் பகலில் நடந்த இந்தக் கோவில் கொள்ளை சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
அதேபோல, அரவக்குறிச்சி அருகே சீத்தாம்பட்டியில் மாரியம் மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று விழாவின் இறுதி நாளாகும். இதனால் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் நீர்க் கலசம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரபு (25) என்பவர் நடனம் ஆடிக் கொண்டே வந்தார். இதற்குக் கோவில் நிர்வாகி நவநீதன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் பிரபு - நவநீதன் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் நவநீதன், ஜேபதி, பிரபு, கிருஷ்ண மூர்த்தி ஆகியோருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த 4 பேரும் பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு முதலில் யாருக்கு மருத்து வர்கள் சிகிச்சை அளிப்பது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை யில் கிடந்த நாற்காலி, பெஞ்சுகளை இருதரப்பினரும் உடைத்து எறிந்தனர். இதனால் அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தனர். மேலும் கரூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவ மனையைச் சூறையாடிய 4 பேர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே தைலாக்குளம் கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று நடந்த திருவிழா வில் இருதரப்பினர் இடையே பிரச்சினை எழுந்தது. சிறிது நேரத்தில் அதுவே மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு நின்றவர்கள் சிதறி ஓடினர்.
அதேநாளில் ஓமலூரை அடுத் துள்ள நாச்சனம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் கும்பாபி சேகம் நடந்தது. விழாவில் நாச்சனம் பட்டி, காடையாம்பட்டி, நடுப் பட்டி, தீவட்டிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் காடையாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமியம்மாள், எல்லம்மாள் ஆகியோரும் கோவில் முன்பு நின்று இருந்தனர். அப்போது சிலர் லட்சுமியம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் சங்கிலியையும், எல்லம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியையும் பறித்துச் சென்று விட்டனர்.
கூட்டத்தில் அந்தக் கொள்ளையர் களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தீவட்டி பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து கொள் ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும் போது, கூட்ட நெரிசலில் யார் எங்கே நிற்கிறார்கள் என்றே தெரிய வில்லை. மேலும் கொள்ளையர் களை அடையாளம் காண முடிய வில்லை. காவல் துறையினர் பாது காப்பு சரியாக இல்லை. போது மான பாதுகாப்பு கொடுக்கப்பட்டி ருந்தால் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்து இருக்காது என்று கூறியுள்ள னர். காவல் துறையின் பாதுகாப்பில் தான் குறை ஏற்பட்டது. கடவுளின் பாதுகாப்பில் ஏன் குறை ஏற்பட்டது?
ஆக கடவுளின் பெயரால் ஏற்படுகிற கலவரங்களும், சிந்தக் கூடிய இரத்தமும் என்றுதான் நிற்குமோ தெரியவில்லை? ஒட்டு மொத்த சமூகமும் விழிப் படைய அதிக காலம் தேவைப்படலாம். ஆனால் இந்தத் துயரங்களில் இருந்து ஒரு தனி மனிதன் உடனடியாக விடு பட முடியும். எப்படி என்கிறீர் களா? அவன் நாத்திகனாக மாறவேண்டும்!

வி.சி.வில்வம்

தலைசிறந்த மனிதநேயம்!

வாழ்க்கையில் மனிதநேயம் கொண்டவர்களை எப்போதாவது நாம் சந்திப்பதுண்டு. அந்நேரங்களில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்! நாமும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை அப்போது எழும்!
சக மனிதர்களின் குறைகளையே பேசிக் கொண்டிராமல், நம்மால் முடிந்த உதவிகளையும், நற்பண்புகளையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்.

சிலர் நம் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பர். அவர் சிறந்த மனிதநேயராக, பண்பாளராக இருப்பார். ஆனால் அதுகுறித்து நாம் அறியாமல் இருந்திருப்போம். ஏதோ ஒரு கட்டத்தில் தெரிய வரும்போது, ஆகா! எவ்வளவு சிறந்த மனிதநேயர் என நெகிழ்ந்து போவோம். அப்படியான மனிதர்தான் தி.மா.சரவணன் (வயது 44).

இவர் திருச்சி. கே.கே.நகர் பகுதியில் வசிக்கிறார். தனது 20 ஆவது வயதில்
நூல்களை வாசிப்பதிலும், அதனைச் சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். தன் மாத வருவாயில் சிறு பகுதியை நூல்களுக்காகவே செலவழித்துள்ளார். (இன்றைக்கு அவரிடம் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் உள்ளன.)

இந்நிலையில் அவர் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கோமதி (வயது 17) என்கிற பெண் தனது பெற்றோருடன் வசித்துள்ளார். கோமதிக்குப் பிறக்கும் போதே பல்வேறு இருதய நோய்கள் இருந்திருக்கிறது.  பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பயன் இல்லாததால், அவரின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில்தான் தி.மா. சரவணன் வருகிறார்.

கோமதியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என முனைகிறார். திருச்சி, மதுரை, சென்னை எனப் பல்வேறு ஊர்களுக்கும் கோமதியை அழைத்துச் செல்கிறார். ஆனால் அவரின் இருதய நோய்க்கு உரிய சிகிச்சை இல்லை எனவும், அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அவரின் உடல்நிலை ஏற்காது எனவும் மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆக கோமதிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என அவரின் பெற்றோர் முடிவுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் கோமதி என்கிற இளம்பெண்ணை, தி.மா.சரவணன் எனும் இளைஞர் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றது விமர்சனம் ஆக்கப்படு கிறது. எப்படி ஒரு பெண்ணை இவர் அழைத்துச் செல்லலாம் என்கிற கேள்விகள் வெளிவரத் தொடங்கின? உயிருக்குப் போராடும் ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தவறில்லை என்கிற சிந்தனையுடன் தி.மா. சரவணன் இருந்துள்ளார்.
எதையுமே  கொச்சையாகவே பார்க்கத் தெரிந்த சமூகம் இதை ஏற்க மறுத்துள்ளது. இந்நெருக்கடியில்தான் தி.மா.சரவணன் ஒரு முடிவுக்கு வருகிறார். கோமதியைத் தானே வாழ்க்கைத் துணைவராக ஏற்பது என்பதுதான் அந்த முடிவு.

இயல்பாகவே கோமதிக்கு இருதயநோய் இருக்கிறது. இந்நிலையில் இம் மனிதர்களால் கோமதிக்குப் புதிய நோய் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். அவரின்  இம்முடிவு
உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவரின் குடும்பத்தில் இதை ஏற்க மறுத்து, அழுது புலம்பியுள்ளனர். இன்றோ, நாளையோ இறக்கப் போகும் ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்கிறாய்? எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கோமதியை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார்.

இப்போது திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றோ, நாளையோ எனக் கருதப்பட்ட ஓர் உயிர் 20 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது. அந்த உயிர் 26.04.2008  நின்றுவிட்டது. கோமதியின் பெற்றோரே ஒரு கட்டத்தில் கைவிட்ட பிறகு, தி.மா.சரவணன் எனும் பெரியாரியத் தோழர் அப்பெண்ணின் மீது நேசம் காட்டி, வாழ்க்கைத் துணைவராக ஏற்று, எந்த மருத்து வமும் இன்றி, அவரின் அன்பினாலும், காதலாலும் 20 ஆண்டுகள் பிழைக்க வைத்திருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தி என்ன தெரியுமா? இவர்களுக்குக் குழந்தை இல்லை. காரணம் என்ன தெரியுமா? உடலுறவுக்கு ஏற்ற உடல்நிலை கோமதிக்கு அமையவில்லை. இவையனைத்தையும் தெரிந்துதான் தி.மா.சரவணன் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் மனைவியின் கடைசி நாளில் அவரைச் சந்தித்து போது, “ இயல்பாகவே எனக்குத் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமில்லை. இந் நிலையில்தான் கோமதியைச் சந்தித்தேன். வாழ்நாளோடு போராடும் ஒரு பெண்ணுக்கு நாம் ஏன் நல்ல தோழனாக இருக்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்குள் வந்தது. இப்போது அந்தத் தோழமை என்னைப் பிரிந்து சென்று விட்டது,” எனக் கண்ணீர் வடிக்கிறார்.

அக் கண்ணீரில் இச்சமூகம் மனிதநேயத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்!

வி.சி.வில்வம்

எதிர்காலம் குறித்து தெரிய வேண்டுமா?


“இங்கு ஜோதிடம் பார்க்கப் படும்”, என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டிவிடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க் கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம்.
ஜோதிடம் அறிவியல் பூர்வ மானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், “கயவர் களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக் கிறார்கள்” என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.
ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் என்ன பொருள்? எங்களை நாங்கள் நம்பவில்லை, அறிவியலை நாங்கள் நம்பவில்லை, அறிவை நாங்கள் நம்பவில்லை என்றே பொருள். சரி! ஒருவர் ஜாதகம் பார்க்கிறார், அவருக்கு ஜோதிடர் சொன்னது போல நடக்க வில்லை, உடனே அவர் என்ன கருத வேண்டும்? ஜோதிடர் சொன்னது நடக்கவில்லை, அதனால் அது உண்மையல்ல என்ற முடிவுக்குத் தானே அவர் வரவேண்டும்?
ஒரு செய்தியைப் பகுத் தறிந்து தெரிந்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டு. அதையே பட்டறிந்தும் தெரியாமல் இருந்தால் அது அறியாமை இல்லையா? இதோ அதுபோன்ற அறியாமையின் அண்மைக்காலச் சில நிகழ்வுகளை வாசித்துப் பாருங்கள்.
திருச்சி, திருவெறும்பூரில் வசிப்பவர் அரசெழிலன். இவர் தம் வீட்டில் கணினி வைத் திருக்கிறார். இவருக்கு இயல் பிலேயே ஜோதிடத்தின் மோசடி களை அறிவதில் ஆர்வம். அந்த வகையில் ஒரு நண்பரின் மூலம் “ ஜாதகம்” குறித்த ஒரு மென் பொருளை (ளுடிகவறயசந) வாங்கி யுள்ளார். அந்த மென் பொருளின் பெயர் “லைப் ஷைன்” (டுகைந ளபைn). இந்த ஜாதக மென்பொருளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள “தமிழ்நாடு கம்ப்யூட்டர்° நிறுவனம்” தயார் செய்து வருகிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.
இந்த மென்பொருளைக் கணினியில் பொருத்தினால் யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம். ஒருவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், ஊர் ஆகியவற்றை கணினியில் பதிவு செய்தால், 36 பக்கங்களைக் கொண்ட ஜோதிடப் பலன்கள்(?) உடனடியாக வெளிவருகின்றன. அதை வைத்துதான் பலரின் ‘பிழைப்பும்’ இங்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்னவென்றால், நாங்கள் கணினித் துறையில் புலியாக்கும், சிங்கமாக்கும் எனப் பீற்றிக் கொள்பவர்களும் இதற்குப் பலியாகிறார்கள்.
இந்த நிலையில் அரசெழிலன் தம் விவரத்தைக் கணினியில் பதிவு செய்துள் ளார். வழக்கம் போலவே 36 பக்கங்கள் வந்து விழுந்து விட்டன. பிறகு மீண்டும் புதிய விவரம் ஒன்றைப் பதிவு செய்துள் ளார். அதில் தன் பெயர், பெற்றோர் பெயர், ஊர் எல்லாம் சரியாகப் பதிந்து, பிறந்த தேதி என்ற இடத்தில் 31.10.2025 எனக் குறிப்பிட்டுள் ளார். உடனே 36 பக்கங்கள் வந்துவிட்டனவாம். 2025 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் 17 ஆண்டுகள் உள்ளன. அதற்கும் ஜோதிட பலன்கள் வந்து விட்டது.
அதேபோல திருச்சி தொடர் வண்டி மைதானத்தில் (ஜி கார்னர்) அண்மையில் ஒரு பொருள்காட்சி நடைபெற்றது. அதில் “ காகபுஜண்டர் கம்ப் யூட்டர் ஜோதிடம்” எனும் பெயரில் ஒருவர் கணினியுடன் ஜோதிடம் பார்த்துள்ளார். நம்மவர்கள்தான் ஏமாறுவதில் கில்லாடிகளாச்சே! ஏராளமான பேர் வரிசையில் நின்றுள்ளனர். அப்போது இராஜா, மூர்த்தி, சுரேஷ் எனும் மூன்று குறும்புக் கார இளைஞர்களும் கூட்டாக வந்துள்ளனர்.
அந்த காகபுஜண்டர் கம்ப் யூட்டர் ஜோதிடத்தின் ஏமாற்று வேலை என்ன தெரியுமா? முதலில் இரண்டு கைகளையும் தண்ணீரில் மூழ்க வேண்டும். அப்படியே ஸ்கானர் போன்ற ஒரு கருவியில் வைக்க வேண்டும். உடனே கைரேகை கள் பதிவு செய்யப்பட்டு, அதற் குரிய பலன்கள் கணினி மூலம் வெளியாகின்றன.
அந்தக் குறும்புக்கார இளை ஞர்களும் அதேபோன்று செய்து விட்டு, பொருள்காட்சியின் மற்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர். மீண்டும் 30 நிமிடம் கழித்து அவ்விடத்திற்கு வந்து, திரும்பவும் ஜாதகம் பார்த்துள் ளனர். முதலில் வெளியான பலனும் அடுத்து வந்த பலனும் முற்றிலும் வெவ் வேறாக இருந்துள்ளன. ஜாதகம் உண்மையானால் எத்தனை முறை கைரேகையைப் பதித் தாலும், ஒரே மாதிரி அல்லவா வரவேண்டும்? அந்த இளை ஞர்களும் காகபுஜண்டரிடம் தகராறு செய்துவிட்டு, தலையில் அடித்துக் கொண்டே சென்று விட்டனர்.
கணினியை மனிதன்தான் கண்டுபிடித்தான். அதுவும் ஆறாவது அறிவான, பகுத்தறி வைக் கொண்டு கண்டுபிடித் தான். மற்றபடி கணினிக்கு என்று தனிஅறிவு கிடையாது. வெளி நாட்டுக்காரன் கண்டுபிடிக்கும் விஞ்ஞானத்தை அறிவுக்கும் பயன் படுத்தலாம்; அழிவுக்கும் பயன் படுத்தலாம். நம்மவர்களுக்கு இரண்டாவதுதான் சாத்திய மாகிறது. மகா வெட்கம்!

வி.சி.வில்வம்

குழந்தைகளைத் தத்தெடுப்பது எப்படி?


மனித வாழ்வில் குழந்தை யின்மை என்பது பெரிய குறை யாகக் கருதப்படுகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட தம்பதியினரைக் குற்றவாளிகளாகக் கருதும் கொடுமையும் இங்கே நிகழ்கிறது. திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் குழந்தை பிறக்காவிட்டால், ‘ஏன்? என்னாச்சு?’ என்கிற சமூகக் கேள்விகள் அல்லது தொந்தரவு கள் அவர்களைச் சித்ரவதை செய்கின்றன. குழந்தையின்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இன்றைக்கு அறிவியல் வென்றெடுத்துள்ளது. அதையும் மீறி சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
இன்னமும் திருமணம் ஆக வில்லையா? என்பதும், ஆன பிறகு குழந்தை இல்லையா? என்கிற கேள்விகளும் இங்கே அநாகரிகமாக உலவி வருகின்றன. இவையெல்லாம் நல்ல சமூகத் தை உருவாக்க உதவாது. அதே நேரத்தில் குழந்தையின்மை என்பதை முற்போக்குச் சிந்தனை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.
பரமேசுவரன் என்ற முன்னோடி:-
ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட மனிதர்களை நாம் இன்னமும் மறந்திருக்க முடியாது. அப்படித்தான் நாகப்பட்டினம் பரமேசுவரன் என்பவரது 3 குழந் தைகளும் அடித்துச் செல்லப் பட்டன. குழந்தைகள் அற்ற குடும்பத்தை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதே நேரம் அவர் சோர்ந்துவிடவில்லை. அதே ஆழிப்பேரலையால் பெற் றோர்களை இழந்த 18 குழந் தைகளைத் (ஒன்றல்ல, இரண் டல்ல - 18 குழந்தைகள்) தத் தெடுத்து “ குழந்தைகளின் உலகத்தையே” உருவாக்கி விட்டார். கவலைகள் என்பது இயல்பு, அவற்றை முன்னெடுத்துச் செல்வதுதான் பகுத்தறிவு!
குழந்தைகளைத் தத்தெடுப்பது எப்படி?
தங்களுக்குக் குழந்தைகள் இருக்கும் பொழுதே, மற்றுமொரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் உயரிய மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். தத்தெ டுப்பு என்பது ஒருபுறம் மகிழ்ச்சி யானது என்றாலும், அவற்றுள் மனிதநேயம், சமூகப்பற்று, ஜாதி மறுப்பு, தனித்துவம், உயரிய குணாதிசயம் எனப் பல்வேறு சிறப்புகள் அடங்கியுள்ளன. இது போன்ற செயல்களின் தொடர் புக்கு “குழந்தைகள் தத்தெடுத்தல் சார்ந்த ஒருங்கிணைப்பு மையம்” என்கிற அரசு சார்பு நிறுவனம் இங்கே இருக்கின்றது. தமிழகத் தில் 19, பாண்டிச்சேரியில் 2 என மொத்தம் 21 கிளை நிறுவனங் கள் செயல்பட்டு வருகின்றன. மிகுந்த வரவேற்போடு நம்மை அணுகும் இந்நிறுவன சமூக ஊழியர்கள், நமக்கான அனைத்துச் செயல்களையும் சட்டப்படி செய்து தருகின்றனர்.
நாம் முதலில் அவர்களைத் தொடர்பு கொள்ளும் போது, நம்மைப் பற்றி அவர்கள் விசாரிப்பர். நமக்கான தேவை என்ன? எந்தக் குழந்தை வேண்டும்? எத்தனை மாதக் குழந்தை வேண்டும்? தம்பதியினர் இருவருக்கும் உடன் பாடுதானா? உங்கள் குடும்பத் தவர்களின் நிலை என்ன? என ஒன்றுவிடாமல் விசாரணை செய்து, பிறகுதான் நமக்கு விண்ணப்பம் கொடுப்பார்கள். அந்த விண்ணப் பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் இரத்த உறவுள்ள இருவரின் ஆதரவுக் கடிதம், நண்பர்கள் வட்டாரத்தில் இருவரின் கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் திருமணப் பதிவுச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வயதுச் சான்று, வருமானச் சான்றும் இணைத்தல் வேண்டும். இவைகளைப் பெற்றுக் கொள் ளும் அந்தக் குழந்தைகள் மையம், ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து நேரிடையாக நம்மிடம் வருவர். குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் அவர்களின் ஆதரவு நிலை என்ன? கொடுக்கப்பட்ட ஆவணங் களின் படி சரியாக இருக்கிறதா? அவர்களின் வருமானத்தில் குழந் தையை வளர்க்க முடியுமா? என ஆய்வு செய்வர். அதன்பிறகே விண்ணப்பத்தை அங்கீகரிப்பர். அதன் நகலை 21 கிளை நிறு வனங்களுக்கும் அனுப்பி வைப்பர். அதிகபட்சம் 6 மாதங்களில் நமக்கான குழந்தையை அவர்கள் பெற்றுத் தருவர்.
சட்டச் சிக்கல் ஏதேனும் நிகழுமா?
வாய்ப்பு இல்லை! ஏனெனில் இது அரசு சார்பு நிறுவனம். மேலும் நீதிமன்றத்தின் மூலமாக இந்நிகழ்வுகள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இங்கே வரக்கூடிய குழந்தைகள் எங்கி ருந்து வருகின்றன? எப்படி கிடைக் கின்றன? என்ற கேள்விகளோடு அக்குழந்தைகள் ஒருங்கிணைப்பு மய்யத்தின் ஊழியர் சரோஜினி அவர்களைத் தொடர்பு கொண்ட போது,
இந்த மையத்திற்கு வரக் கூடிய குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரிக்கிறோம். ஒன்று, ஒப்புவிக்கப்பட்ட குழந்தைகள். இந்த அடிப்படையில் வருபவர்கள், ஏற்கெனவே பெண் குழந்தைகள் இருந்து, அடுத்ததும் பெண் குழந்தையாக இருந்தால் பெற் றோர்களே ஒப்படைத்துச் செல்வர். அதேபோன்று தவறான உறவி னால் உருவான குழந்தைகள், விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகள் இவ் வகைப்படுவர். இரண்டாம் வகையில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட தொட்டில் குழந் தைகள் அடங்குவர். இதில் முதல் வகைக் குழந்தைகளின் பெற் றோர்களிடம் அனைத்துச் சான்று களும் பெறப்பட்டு, இரண்டு மாதங்கள் கழித்து, அரசு காப்பகக் குழந்தையாக சட்டப்படி மாறி விடும். இரண்டாம் வகைக் குழந் தைகளின் உறவுகளைப் பெறு வதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்படும். இறுதியில் நீதி மன்ற நடவடிக்கைகளின் மூலம் அக்குழந்தைகளும் அரசுக் குழந் தையாக மாறிவிடும். அதன்பிறகு அக்குழந்தைகளுக்கும், பெற் றோர்களுக்குமான உறவு நின்று விடும். அக்குழந்தை எங்கு வளர் கிறது என்கிற செய்திகள் கூட யாருக்கும் தெரியாது. எனவே முறைப்படியான, சட்ட பூர்வமான வகையில் இந்த அரசு அமைப்பு செயல்பட்டு வருகிறது”, என விளக்கம் அளித்தார்.
தத்தெடுக்கும் நடைமுறைகள்:-
நம்முடைய விண்ணப்பத்திற்கு ஏற்ற குழந்தைகள் வரும் பொழுது நமக்குத் தகவல் தருவர். ஒன்றும், அதற்கு மேலும் குழந் தைகள் இருந்தால் நாமே தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். குழந் தையைப் பெற்றுக் கொண்ட தற்குப் பிறகு பெற்றோர்களுக் கும், ஒருங்கிணைப்பு மையத்திற்கு மான ஆவணங்கள் தயார் செய்யப்படும். குழந்தைக்கு ஏதேனும் நோய்கள் இருக்கிறதா என்பது உட்பட அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப் படும். பின் குழந்தையின் பராமரிப்பு தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாம் தகவல் அனுப்ப வேண்டும். அக்குழந்தையின் 18 வயதுவரை குழந்தைகள் ஒருங்கிணைப்பு மையம் கண்காணிக்கும்.
எனவே குழந்தைகள் தத் தெடுப்பு என்பது எளிதானது. நம் மனமும் அதற்கேற்ப இலகுவாக வேண்டும். தயக்கங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு, கவலை களைக் காணாத தூரம் திரும்பி அனுப்பிவிட்டு, சமூகப் புரட்சி யாம் இப்பணியை நாம் செய்தாக வேண்டும். சுயநலமும், பொது நலமும் அடங்கியது இந்நிகழ்வு. அதுநேரம் அம்மழலைச் செல்வம் நம் மடியில் தவழும்! மனிதநேயம் தழைக்கும்!

தொடர்பு முகவரி
குழந்தைகள் தத்தெடுத்தல் - ஒருங்கிணைப்பு மையம்,
எண். 5, 3 ஆவது முதன் மைச் சாலை,
செனாய்நகர்,
சென்னை - 600 030.
தொலைப் பேசி- 044-2628677
.

வி.சி.வில்வம்

செய்வார்களா காதலர்கள்?


உலகம் முழுவதும் பிப்-14. காதலர் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்தை எதிர்த்து இந்து மதவெறிக் கும்பல்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளன. அண்மையில், திருச்சியில் விசுவ இந்து பரிஷத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் காதல் ஜோடிகளை விரட்டியடிப் போம் என அவர்கள் முழக்கமிட்டுள்ளனர். அது மட்டு மின்றி, இந்து கலாச்சாரத்தை (?) இழிவுபடுத்தும் காதலர் தினத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், திருக்கோவில்களிலோ, பொது இடங்களிலோ காதல் ஜோடிகள் இருந்தால் அவர்களை அப்புறப்படுத்துவோம் எனவும் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
அதேபோல மற்றொரு இந்து மதவெறி அமைப்பு ஒன்று, கோவில்களுக்குள் காதலர்கள் வரக்கூடாது. மீறி வந்தால் தாலியைக் கொடுத்து உடனே கட்டச் சொல்லுவோம் என மிரட்டியுள்ளது.

பொதுவாகவே இந்தியா முழுக்கவும் பஜ்ரங்தள், சிவசேனா, ஆர்.எஸ். எஸ் , பாஜக என அனைத்து மதவெறி அமைப்புகளுமே காதலர் தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும், வன் முறையிலும் ஈடுபட்டு வருகின்றன. அது சரி! காதல் மீது மதவெறி அமைப்புகளுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

காதலர்கள் மீது முற்போக்காளர்களுக்கு ஓர் வருத்தம் உண்டு. காதல் எனப்படும் உணர்வைச் சரியாகப் புரிந்து கொண்டு, அந்தக் காதல் நடவடிக்கைகள் கல்வியை, பணியைப் பாதிக்காத வண்ணம், உணர்ச்சி வசப்படாமல் காதல் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என முற்போக்காளர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் மதவெறி அமைப்புகள் என்ன சொல்கின்றன? காதலர் தினத்தை எதிர்ப்போம், காதலர்களை விரட்டியடிப்போம் என வெறித்தனமாகக் கூறுகின்றனர். அறியாமையில் காதல் உணர்ச்சி வசப்பட்டு, வாழ்க்கையில் தோற்றுவிடக் கூடாது என அறிவுரை கூறினால் அது வேறு செய்தி. ஆனால் காதலர் தினத்தையே எதிர்க்கிறோம் என்றால் என்ன பொருள்?
இங்குதான் பார்ப்பனீய நச்சு வேலை செய்கிறது. காதலர்கள் எனப்படுபவர்கள் பெரும்பாலும் வெவ்வேறான ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது அவர்களின் பார்வையில் பிற்போக்குத்தனம். ஏனெனில் இது ஒரு சாதி மறுப்புத் திருமணமாகும். இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொன்னால், ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொண்டால்தான் அது பார்ப்பனர்களின் பார்வையில் ‘முற்போக்குத்தனம்’!

இந்த முற்போக்கின் அடிப்படையிலேயே பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்த்து வருகின் றனர். காதலர் தினத்தை மட்டுமல்ல, யாருமே காதலிக்கக் கூடாது என்பதுதான் இவர்களின் கொள்கையே(!).  இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்த அமைப்புகள் படாதபாடுபடுகின்றன.  காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீ வைத்துக் கொளுத்துவதும், காதலர்களைக் கண்டால் விரட்டியடிப்போம் என வன்முறை பேச்சு பேசுவதும், கோவிலுக்குள்  நுழையவிடமாட்டோம் எனக் கொக்கரிப்பதுமாக இருக்கின்றனர். இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். காதலர்கள் அனைவரும் கோவிலுக்குப் போகமாட் டோம் என உறுதியேற்க வேண் டும். அதே நேரத்தில் காதலர் களின் தனிமனித உரிமையில் அநாகரிமாக தலையிடும் இந்து மதவெறி அமைப்புகளின் முகத்திரைகளைக் காதலர்கள் கிழித்தெறிய வேண்டும்.

கலாச்சாரம், பண்பாட்டுச் சீரழிவு எனும் பெயரில் காதலர் தினத்தை எதிர்க்கிறார்களாம். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டின் மொத்த சீர்குலை வுக்கும் ஒட்டு மொத்தக் காரணமே இந்தச் சாக்கடைப் பார்ப்பனீயம்தானே! காதலிப்பதால் சீரழிவு ஏற்படுகிறது என்றால், பார்வதி குளியலை சிவன் பார்த் தது, ஆணும், ஆணும் உடலுறவு கொண்டது, தந்தையும் மகளும் உடலுறவு கொண்டது, மாரியம்மன் தெருவில் நிர்வாணமாக ஓடியது, கிருஷ்ணன் குளிக்கும் பெண்களின் உடைகளை எடுத்துக் கொண்டு, நிர்வாணமாக மேலே வா எனக் கூறியது, தசரதன் 60,000 பெண்களோடு குடும்பம் நடத்தியது, அம்மாவைப் போலவே மனைவி வேண்டும் என பிள்ளையார் அசிங்கமாய் வசனம் பேசியது, நாரதரும், கிருஷ்ண னும் உடலுறவு கொண்டது, விஷ்ணுவும், சிவனும் உடலுறவு கொண்டது எனப் பார்ப்பனர்களின் இந்து மத அமைப்பே அசிங்கத்தின் உச்சக் கட்டம் தானே!


இந்நிலையில் கலாச்சாரத்தைக் காக்க வந்த புனிதர்களாக இந்த மதவெறியர்கள் வேடம் தரிக்கின்றனர். இந்த வேடத்தை யார் கலைப்பது? காதலர்கள்தான் கலைக்க வேண்டும். அவர்களுக்குத் தகுந்த சூடு வைக்க வேண்டும்.

செய்வார்களா காதலர்கள்?

                                                                                                              வி.சி.வில்வம்