Saturday, December 27, 2014

கீதையில் என்ன இருக்கிறது?

கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே! எனக் கீதையில் இருப்பதாகக் கூறுகின்றனர். 700 க்கும் மேற்பட்ட சுலோகங்களில் ஒன்றில் கூட அப்படிக் கிடையாது. வேறு என்ன இருக்கிறது?
நால்வருணம் கொண்ட மக்கள், தத்தம் குலத்தொழிலைச் சரியாகச் செய்ய வேண்டும். அதற்குக் கூலியை எதிர்பார்க்கக் கூடாது என்றுதான் கீதையில் உள்ளது. ஆனால் வள்ளுவரோ...
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி - தன்
மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
உன் உழைப்புக்குக் கண்டிப்பாய் ஊதியம் உண்டு என்கிறார் வள்ளுவர். நீ என்ன உழைத்தாலும் உனக்கு ஊதியம் கிடையாது என்கிறது கீதை. இப்போது சொல்லுங்கள் தேசிய நூலா கீதை?

No comments:

Post a Comment