Saturday, December 27, 2014

நீயா? நானா?

திருச்சியில் செய்தியாளர்கள் சிலர், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள். ஒரு காவலர், அவர்கள் செய்தியாளர்கள் எனத் தெரியாமல் மறித்து, வண்டியில் இருந்த சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். செய்தியாளர்களுக்குக் கோபம். வண்டியை சாலையின் நடுவிலே நிறுத்தி விட்டார்கள். போக்குவரத்து நெருக்கடி கூடிவிட்டது. சாவியை எடுத்த காவலர் தூரத்தில் இருந்து கத்துகிறார். இவர்களோ வண்டியை எடுக்காமல், காவலரை இங்கே வா என அழைக்கின்றனர். அப்போது அங்கே வந்த வேறு ஒரு காவலர், இவர்கள் செய்தியாளர்கள் என அறிந்து பிரச்சினையை முடித்து வைக்கிறார். ஏன் சாவியை எடுத்தீர்கள் என்றதற்கு, தலைக்கவசம் அணியவில்லை என்றாராம் காவலர். அதற்கு சாவியை எடுத்துக் கொண்டு, ஏன் அறைக்கு ஓடினீர்கள். காசு வாங்கவா? என்றார்களாம் செய்தியாளர்கள். திருச்சி பிரஸ் கிளப் வழங்கும் "நீயா? நானா? பிராட் யு பை ட்ராபிக் போலீஸ் ஸ்டேஷன்.

No comments:

Post a Comment