Tuesday, December 16, 2014

பகத்சிங் ஆசை!




 
பகத்சிங்கிடம் தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது.

No comments:

Post a Comment