Sunday, December 28, 2014

மதிப்பிற்குரிய மருத்துவர்!

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்
செங்குட்டுவன் அவர்களுக்கு வணக்கம்!
எங்கள் மகள் "கியூபா" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.
அப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்!
அதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.
நல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.
ஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள்! அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்!

No comments:

Post a Comment