Wednesday, March 11, 2015

மண்ணின் பாரம்!

2015 ஆம் ஆண்டு யார், யாருக்கு என்ன பலன்கள் என இரவு முழுவதும் தவமிருந்தேன். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனக் கிழமைகள் வரிசையாக வருவதால் நாத்திகர்களுக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டு. அதேநேரம் 2015 இன் கூட்டுத் தொகையானது 2+0+1+5 = 8 வருவதால் ஆத்திகர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டிற்கு அமைதியும், மக்களுக்கு மகிழ்ச்சியும் வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த ஆண்டு முழுக்கச் சுகமாக வாழ்வர்.
மாறாக நாட்டில் வன்முறையும், மக்களுக்குள் பிரிவினையும் செய்பவர்கள் இந்த மண்ணின் பாரமாகக் கருதப்படுவர்.
இதுவே எம் ஜோதிடம்.

No comments:

Post a Comment