Wednesday, March 11, 2015

சகாயம் அய்.ஏ.எஸ்.

ஜப்பான் நாட்டில் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டில் இருந்த சகாயம் அய்.ஏ.எஸ். அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அவரும் சம்மதித்தார். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, தடையில்லா சான்று பெற வேண்டும். சகாயம் அவர்களும் விண்ணப்பித்தார். அரசிடம் பதில் இல்லை. இரு நாட்களுக்கு முன் அவரே தலைமைச் செயலகம் சென்றும் முயற்சித்தார். பயனில்லை. இந்நிலையில் சகாயம் வருகிறார் என, ஜப்பானில் விழா சீட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்தன. இடையில் விழாவுக்கு நான்கு நாட்களே உள்ளன. ஒரு நேர்மையான மனிதருக்கு கிடைக்கும் சங்கடத்தைப் பாருங்கள். நேர்மை இல்லை, நியாயம் இல்லை என ஒருபுறம் போராடுகிறோம். அப்படியாக வாழும் ஒரு மனிதர் வீழ்த்தப்படுவதையும் பார்க்கிறோம்.

No comments:

Post a Comment