Wednesday, March 11, 2015

ஜப்பான் வாழ்க்கை!

ஜப்பான் சென்று சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் நீங்கள் மாறுப்பட்டவர்கள். இலங்கைப் பிரச்சினையின் போது ஈழத் தமிழர்களின் நியாயத்தை ஜப்பான் அரசாங்கத்திற்குப் புரிய வைத்தீர்கள். ஒரு அரசாங்கம் செய்யும் வேலையைச் சாதாரணமாய் செய்தீர்கள். ஜப்பானில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் சில அரசுப் பள்ளிகளுக்கு உதவிகள் செய்கிறீர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பள்ளியை, குழந்தையைப் போல தத்தெடுத்துச் சீராட்டி வருகிறீர்கள். தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்கிறீர்கள். இன்றைய தினம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, உணர்வுபூர்வமாகத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறீர்கள். வாழ்த்துகள் நண்பர்களே! பல்லாயிரம் மைல் கடந்தாலும் எங்கள் நினைவில் எப்போதும் நீங்கள்!

No comments:

Post a Comment