Thursday, May 16, 2013

எங்கள் சாருக்குப் பாராட்டு விழா!

வணக்கம் !             
எங்கள் சாருக்குப்
பாராட்டு விழா!
எஸ்.பி.ஏ
எனும் மூன்றெழுத்தில்
எங்கள்
உள்ளம் நிறைந்தவர் !
ஆதலால்
புதல்வர் நாங்கள்
முதல்வர் உங்களை
சந்திக்க மே- 26
வருகிறோம்...
குடும்பம் குடும்பமாய்
வருகிறோம்.
குழந்தைகளுடன்
வருகிறோம்.
பேராசிரியராய்
பெருமை சேர்த்தீர்கள் !
முதல்வராய்
முன்னோடி ஆனீர்கள் !                                                                                                        
தமிழக முதல்வர்கள் போல்
5 ஆண்டுகள்
ஆட்சி செய்தீர்கள் !
உங்களின் ஆட்சிக் காலம்
ஓர் பொற்காலம் !
ஆம்!
கல்லூரிக்குள்
கலையம்சம்
கொண்டு வந்தீர் !
கூடவே
கட்டிடங்களையும்
அள்ளித் தந்தீர் !
ஓய்வற்ற
உங்கள் உழைப்பால்
ஆய்வுத் துறை வந்தது.
முதுகலைப் படிப்புகளும்
முளைத்தன.
நிர்வாகம் செய்வதில்
நீங்கள் நிகரற்றவர்!
நிர்வாக மேலாண்மையை
அமெரிக்கா, இலண்டன்
சென்று பயில வேண்டாம்.
உங்களிடம்
6 மாதம்
பழகினால் போதும்!
அன்றைய காலத்தில்
அடிக்கடி நிகழ்ந்தன
வேலை நிறுத்தம்...
அதற்கு நீங்கள்
வைத்தீர்கள்
முற்றுப்புள்ளி !
அதுவே
உங்கள் சாதனையின்
முதற்புள்ளி !
அவரவர்
ஆர்வமரிந்து
வேலை கொடுப்பது
உங்கள் தனித்தன்மை !
அவ்வேலை
தாமதமானால்
தானே முடித்து விடுவது
உங்களின்
பெருந்தன்மை !
மாணவர்களைத்
தட்டிக் கேட்பதிலும்,
மாணவர்களுக்காக
முட்டுக் கொடுப்பதிலும்
நீங்கள் வல்லவர் !
கல்லூரி
கழிப்பறைகளையும்
சுத்தமாகப்
பேணச் செய்த
நல்லவர்!
மொத்தத்தில் உயர்ந்தது
கல்லூரியின் தரம்.
நீங்களே ஆனீர்கள்
அதற்கு உரம் !
நிறைய புகழ்வது
என் நோக்கமல்ல !
நிகழ்ந்ததைச்
சொல்வதொன்றும்
குற்றமல்ல.
துருதுருவென்ற
உங்கள்
சுறுசுறுப்பு
ஆயிரம் சேதி சொல்லும்.
நீங்கள் நடந்து
நான் பார்த்ததில்லை.
காரணம்
உங்கள் நடையே
ஒரு ஓட்டம்!
உங்கள்
ஆளுமை கண்டு
நான் அசந்திருக்கிறேன்.
சக மாணவர்களிடமும்
இதைப் பகிர்ந்திருக்கிறேன்!
ஆக மொத்தம்
நிறைவாய்
முடித்துவிட்டீர்கள்
உங்கள் பணியை !
தொடர்ந்து
காக்க வேண்டும் 
இவ் வெற்றிக் கனியை
கல்வி வரலாறும்
கல்லூரி வரலாறும்
உங்கள் பெயரை
எழுதிக் கொள்ளும்!
அதைப்
படித்துப் படித்து
எங்கள்
மனமெல்லாம்
துள்ளும்!
வாழ்த்துகள் !


  வி.சி.வில்வம்

No comments:

Post a Comment