Wednesday, March 6, 2013

தெரியாத வரலாறு!



உன்
வரலாறு
அத்தனையும் தெரியும்
எங்களுக்கு!

சிவப்புத் தோல்
விரித்தாய்...
விழுந்தவனை
அழித்தாய்

மந்திரம் சொல்லி,
மத மயக்கம்
கொடுத்தாய்

ஜாதி
வலையில்
சதி
பின்னினாய்

கடவுளென்ற
கயமை
கற்பித்தாய்

நீ
அழித்திடாத
அழிவுகளே
அரிது

சூழ்ச்சிதானே
உன்
சூத்திரம்


எதுவும்
தெரியாதென்று
திரியாதே ?

உன் வரலாறு
அத்தனையும்
தெரியும் எங்களுக்கு...

ஒன்றே
ஒன்று
புரியவே இல்லை.

ஆறறிவு மக்களுக்கே
கேடுகள் 
பல செய்துள்ளாயே...

நீ
மேய்த்தாயே
ஆடு, மாடுகள்...
அதற்கு
எவ்வளவு கொடுமைகள்
செய்திருப்பாய் ?

                                                                    வி.சி.வில்வம்

No comments:

Post a Comment