Wednesday, March 6, 2013

கவிதைகள்


உன் கடவுள் செய்வாரா ?

மரம்
மழை தரும்

மாடு
பால் தரும்

கழுதை
பொதி சுமக்கும்

மரம்,மாடு,கழுதை
செய்வதை
உன் கடவுள்
செய்வாரா ?
                                              
 



கதை எதற்கு ?

 

முருகனையும்
முனியனையும்
மனிதன் செய்தான்

காளியும்
மாரியும்
மனிதன் செய்தது 

பெருமாளும்
பிள்ளையாரும் கூட
மனிதன் செய்தவையே...

பின்
கடவுள் படைத்தார்                                                 

என்ற கதை எதற்கு ?






 
                                                                     வி.சி.வில்வம்

No comments:

Post a Comment