Monday, March 7, 2016

முகநூல் பதிவுகள்!




பார்ப்பனர்களும், பார்ப்பனீயமும் எவ்வளவு கேடு என்பதற்கு அண்மை சாட்சியே ''ரோகித் வெமுலா'' பிணம்!


வணக்கம்! 1100 அம்மா அழைப்பு மையமா?
ஆமாம்! உங்களுக்கு என்ன குறை?

ஜெயலலிதா ஆட்சி மோசமா இருக்கே, சரி செய்வீங்களா?





"கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான். தப்புத் தப்பா ஊசி போட்டு சாவடிக்கிறான்" என்கிறது அந்தப் பாட்டு.

தப்பு, தப்பா ஊசி போட்டும் நீங்க சாகலையே? என்பதுதான் என் வருத்தம்!

 178 Like, 7 shares



பாஜக தயவு இல்லாமல், தமிழகத்தில் யாருமே ஆட்சி செய்ய முடியாது - தமிழிசை

ஆமா.. ஆமா.. அமெரிக்காவில் கூட முடியாது!

 367  Like, 20 shares



தலித் அமைப்புகளில் இருக்கும் சில இளைஞர்களுக்கு, பெரியார் பேசிய பார்ப்பன எதிர்ப்புப் பிடிக்கவில்லை.

பரவாயில்லை! அம்பேத்கர் பேசிய பார்ப்பன எதிர்ப்பையாவது படியுங்கள்!

 368  Like, 25 shares



பெரியாரிடம் சில தொண்டர்கள், "உங்களுக்கு ஒரு சிலை செய்தோம், அது உங்களைப் போல இல்லை", என்றார்களாம்.

அதற்குப் பெரியார், ''என்னை மாதிரியே வேண்டும் என்றால், நீங்கள் என்னைத் தான் நிற்க வைக்க வேண்டும்", என்றாராம்.

  253  Like, 7 shares



அய்தராபாத் பல்கலைக் கழகக் குடியிருப்பில், ஒரு பார்ப்பனப் பேராசிரியர், தன் குடும்பத்திற்கு மட்டும் ஒரு கிணறு வெட்டி தண்ணீர் எடுத்துள்ளார். பலகலைக் கழகத் தண்ணீரைச் சூத்திரர்கள் பயன்படுத்துவதுதால் அந்தத் தண்ணீர் தீட்டாம்.

அது சரி! அந்தக் கிணற்றைச் சூத்திரர்கள் வெட்டினார்களா? அல்லது நீங்களும், உங்கள் மாமியும் வெட்டினீ ர்களா பேராசிரியர்?

  187  Like, 22 shares



எங்கள் மகள் கியூபா, கராத்தே பயிற்சியில் இன்று "ஆரஞ்சு பெல்ட்" வாங்கியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள்!

எங்கள் மகளுக்கு நாங்கள் சொன்னது, "கடவுளை விட, கராத்தே முக்கியம்!"

 566  Like, 11 shares



"திராவிடர்" எனும் பெயரைப் பயன்படுத்திய அரசியல் கட்சிகள், தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை.

"திராவிடர்" எனும் பெயரைப் பயன்படுத்திய பெரியார், தமிழர்களுக்கு மட்டுமே எல்லாமும் செய்தார்!

 170  Like, 6 shares

No comments:

Post a Comment