Saturday, February 8, 2014

மண வாழ்வுக்கு மன்றல் !

வணக்கம் !

"வாழ்க்கைக்குத்  துணை வேண்டும்"
என்பது உங்கள்
 தேடலாக  இருக்கலாம்.

உங்களுக்கு 
"மன்றல்" வாழ்த்துகள்!

வாழ்த்துகள்  மட்டுமல்ல...                                 
                                                                                          
வாய்ப்புகளும்  உண்டு.

பெரியார் சுயமரியாதை
திருமண நிலையத்தின்
"மன்றல் !"

இந்த வாய்ப்புகளை
சென்னையில்,
திருச்சியில்,

மதுரையில்,
நெல்லையில்
வழங்கியது.

மீண்டும்
சென்னைக்கு வருகிறது.

பிப்ரவரி 23 ஞாயிறு,
பெரியார் திடல்.

காலை 9 முதல்...
சாயங்காலம் 5 வரை. 

உங்களுக்கு,
உங்கள் பிரியமானவர்களுக்கு,

துணைவரை இழந்தோம்
என்போருக்கு,

பிரிந்தோம்
என்போருக்கு,

மாற்றுத் திறனாளி
நண்பர்களுக்கு...

அனைவருக்கும்
வாய்ப்புகள்.

ஜாதிப் பிரிவுகள் இல்லை.
மதப் பிரிவுகள் இல்லை.

எல்லோரும் கூடலாம்
இயன்றவரைத்  தேடலாம்.

பொறுமையாய்ப் பார்க்கலாம்
பொருத்தமாய் இணையலாம்.

நிகழ்ச்சிக்கு
வணிக நோக்கம் இல்லை,
மனித நோக்கம் உண்டு.

ஒரே ஜாதியில்  
பணக்காரர் ஒரு ஜாதி
ஏழை ஒரு ஜாதி.

மன்றலுக்கோ ஜாதியும் இல்லை.
ஜாதிக்குள் ஜாதியும் இல்லை .

அனைவரையும்
அழைக்கிறோம்...

வாருங்கள்

வாய்ப்புகளை
வசப்படுத்துங்கள் !

மீண்டும்
வாழ்த்துகள் !                                                                                                                  
                                                              

2 comments:

  1. அன்புத் தோழர்க்கு வணக்கம். தங்களின் இந்த மணஇணையர் தேர்வுக்கான அழைப்பை எனது வலைப்பக்கத்தில் நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன். - பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2014/02/blog-post_9.html

    ReplyDelete
  2. இந்த உ ங்களின் மன்றல் அழைப்பை எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன் - உங்கள் முகவரி தந்து.
    நண்பர்கள் பலரும் தங்கள் வாழ்த்தை அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் இட்டிருக்கிறாரகள். பார்க்க வேண்டுகிறேன்-http://valarumkavithai.blogspot.in/2014/02/blog-post_9.html#comment-form

    ReplyDelete