Wednesday, March 11, 2015

பெல் நிறுவனம் விற்பனை!

பெல் நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளைத் தனி ஒரு முதலாளிக்கு விற்பனை செய்ய இருக்கிறார்கள். பெல் நிறுவனம் இந்தியாவின் நவரத்ன தொழிற்கூடம். இலாபம் கொழிக்கும் பாய்லர் ஆலை. இந்த இந்திய அரசாங்க சொத்தை, இந்தியர்களின் சொத்தைத் தனி முதலாளிக்கு விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

நேற்று திருச்சி, திருவெறும்பூரில் பெல் நிறுவன ஊழியர்கள் பேரணி மூலம் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். சாதாரண ஒரு ஊழியர் இந்தியச் சொத்தை விற்காதே என்கிறார். தேசப்பற்று மிக்க அரசியல்வாதிகளோ அப்படித்தான் விற்போம் என்கிறார்கள். பாரத் மாத்தாகீ ஜே என்பவர்களே,. அவள் குரல்வளையை நெரித்து கொலை செய்யலாமா?

No comments:

Post a Comment